சென்னை, மார்ச் 27- தமிழால், தமிழராய் இணைந்து தமிழை வளர்ப் போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயண மாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். பயணத்தின் 3ஆவது நாளில் அமீரக முதலீட்டாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகை யில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது. உலகளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருகி ன்றன. தமிழ்நாட்டில் பல் வேறு துறைகளில் வாய்ப்பு கள் கொட்டிக் கிடக்கின்றன என்றார். நோபல் குழுமம் சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஃகு தொழிற் சாலை அமைக்கவும், ஒயிட் ஹவுஸ் இன்டக்ரேட்டட் தையல் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கவும், போக்குவரத்துத் துறையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை த்தொடர்ந்து நிறுவனங் களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை முதல மைச்சர் சந்தித்தார். அப்போது, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், ஷெராப் குழுமம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரு ஒப்பந்தங்கள் மூலம் மேலும் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடை க்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்படியாக மொத்தமாக 2, 600 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகள் வாயிலாக தமிழ்நாட்டில் புதிதாக 9,700 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவா கும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து துபாய் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற `நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ என்ற நிகழ்வில், துபாய் வாழ் தமிழர்களிடையே பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “மரம் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் அது அதன் வேரை விடுவதில்லை. அதை போல நாம் அனை வரும் தமிழால் இணை வோம், தமிழராய் இணை வோம், தமிழை வளர்ப்போம். தமிழை, தமிழ்நாட்டை ஒரு போதும் விட்டுவிடாதீர்கள். சாதியாக, மதமாக உங்களை பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.