tamilnadu

img

இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வீடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 8 தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள்  இனி குடும்பத் தலைவிகள் பெயரில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் உள்ளாட்சி அமைப்பு களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக் கள் என்று கூறினார், பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திமுக அரசு செயல் படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில் தான் வழங்கப்படும்.   கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். கட்ட ணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கேரள முன்னாள் அமைச்சர் கே.கே.ஷைலஜா  திமுக மகளிர் அணித்தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் ,சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட னர்.