செஸ் தோன்றிய நாடு இந்தியாவாக இருந் தாலும் கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளை யாட்டு போன்று அதிகளவில் பிரபலம் கிடையாது. விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட ஒன்றிரண்டு பேர் உலகளவில் விளை யாடுவார்கள். வெற்றியை குவிப்பார்கள். அதனை பலர் பாராட்டுவார்கள். இது குறிப்பிட்ட அளவில் செய்தியாக வெளியாகும். அவ்வளவு தான் இந்தியாவில் செஸ் நிலைமை. அதிலும் தற்போது 44-வது செஸ் ஒலிம்பி யாட் தொடரை நடத்தும் தமிழ்நாட்டில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் தான் முதல் நிலையில் மிகவும் பிரபலம். மற்ற போட்டிகள் எல்லாம் இரண்டாம் நிலை தான். அதுவும் செஸ் விளையாட்டு எந்த நிலை யில் உள்ளது என்பதை திடமாக சொல்ல முடியாது. தமிழ் நாட்டில் பள்ளி அளவில் நடைபெறும் செஸ் விளை யாட்டு என்ற அடிப்படையில் செய்தியாக வெளியாகும். இது தான் தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் உள்ள உறவு. ஆனால் இந்த நிலைமை சில மாதங்களில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவில் முதன்முறை யாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44-வது சீசன் சென்னையில் நடைபெறுமென அறி விக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு மாநிலம் சதுரங்க தொடர்புடைய மாநிலம் போல் மாறி யுள்ளது.
எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட் தொடர் பான பேனர்கள், அறிவிப்புகள், வாழ்த்து போஸ்டர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் அளவிற்கு பாரம்பரிய விழாவாக மாறியுள்ளது. அதாவது தமிழ்நாடு என்றால் “ஜல்லிக்கட்டு - பொங்கல்” என்ற சிறப்பு பெயர் உள்ளதோ அதே போல தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் பாரம்பரியத்தில் என்ன தொடர்பு என இணையத்தில் உலக நாடுகள் தேடும் அளவிற்கு தமிழ்நாடு - செஸ் என்ற இரண்டு அடிப்படை சொற்கள் பிரபலமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசின் முன்னோட்ட அறிவிப்பு மற்றும் செயல்பாடு தான். செஸ் ஒலிம்பியாட் என்பது உலக அளவில் நடை பெறும் போட்டி என்பதை விட இது தமிழ்நாட்டில் நடை பெறும் போட்டி என்ற ஒரே சிறப்புடன் தனியாக அதிகபட்ச நிதியை ஒதுக்கி, பிரம்மாண்ட செலவுகள், பிரபலமா கும் அளவிற்கு ஏற்பாடுகள் என அனைத்து வேலைகளி லும் தனி கவனம் செலுத்தியதன் மூலம் தமிழர்கள் செஸ் விளையாட்டை பாரம்பரிய போட்டியாக நினைத்து அவர்களும் தங்களது சொந்த செலவில் தனி ஏற்பாடு கள் மூலம் தமிழ்நாட்டை “சதுரங்க நாடு” என்ற அடிப்ப டையில் மாற்றி கலக்கி வருகின்றனர்.
புதிய வசதி
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் போட்டி தொடர்பாக சந்தேகம், தங்குமிடம், உணவு என அனைத்திற்கும் தொடர்பு கொள்ள தனி அதிகாரிகளின் தொலைபேசி கையேடை தமிழ்நாடு அரசு தயாரித்து வெளியிட்டுள்ளது.