tamilnadu

தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு சாதனை!

சென்னை,ஜன.17- தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம்  தேதி முதல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய பொது மக்கள் பின்னர் ஆர்வத்துடன் போட முன்வந்த னர். கொரோனா 2-ஆவது அலையின் பாதிப்பு தடுப்பூசி போடும் ஆர்வத்தை மேலும் அதிகரி த்தது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள பேராயுதமாக விழிப்புணர்வு செய்யப்பட்டதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து போட்டுக் கொண்டனர். மெகா சிறப்பு முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது 15-18 வயதுக்குட்பட்ட 25 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முதல் தவணை இலக்கை எட்டுகிறது. தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி வரை 8 கோடியே 84 லட்சத்து 83 ஆயிரத்து 914 தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. முதல் தவணை 5 கோடியே 13 லட்சத்து 1,958 பேருக்கு போடப்பட்டுள்ளது. 2-வது தவணை 3 கோடியே 71 லட்சத்து  81 ஆயிரத்து 956 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. முதல் தவணை 88.62 விழுக்காடும், 2-வது தவணை 64.23  விழுக்காடும் போடப்பட்டுள்ளது. காஞ்சி புரம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங் களில் முதல் தவணை 100 விழுக்காட்டை தாண்டி யுள்ளது. கோவை விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி, கரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 90-100 விழுக்காட்டை நிறைவு செய்துள்ளது. இன்னும் 93 லட்சத்து 48 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். 2-ஆவது தவணை தடுப்பூசியை பொறுத்தமட்டில் நீலகிரி, கோவை மாவட்டங் கள் 80 விழுக்காட்டை கடந்துள்ளது. கள்ளக் குறிச்சி, திண்டுக்கல், சென்னை, அரியலூர், ராம நாதபுரம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் 70-80 விழுக்காடு பதிவாகி உள்ளது. தற்போது உருமாறி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.