பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா
பாபநாசம், ஜுன் 28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமைச் செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ் துறைத் தலைவர் தவச்செல்வன் வரவேற்றார். ஆடுதுறை கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சிவ.கிருஷ்ணன் சிரிக்க, சிந்திக்க என்றத் தலைப்பில் பேசினார். பள்ளி முதல்வர் தீபக், துணை முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தினர். இதில் பரதநாட்டியம், கவிதை, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், திருவள்ளுவரின் திருக்குறள், ஔவையாரின் கொன்றை வேந்தன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முதுகலை தமிழாசிரியை பிரியதர்ஷினி நன்றி கூறினார்.