தமிழ்மொழி உரிமைப் போராட்டம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது. தமிழுக்கு அரசியல் சாசன ரீதியாக அங்கீ காரம் அளிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பல்வேறு தேசிய அடையாளங்களைக் கொண்டுள்ளன. தேசிய இனங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா. நாட்டில் 500 சமஸ்தானங்கள், 12 மாகாணங்கள் இருந்தன. சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி மாகாண சுயாட்சி சுதந்திரப் போராட்டமாகத்தான் இருந்தது. பின்னர் மாகாணங்கள் இணைந்து ஒன்றுபட்ட சுதந்திரப் போராட்டத்தை நடத்தின.
கைமாறிய சுதந்திரம்
1947-ஆம் ஆண்டுபெற்ற சுதந்திரம் உழைக்கும் மக்களின் கைகளுக்கோ, பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கோ மாறவில்லை. அது ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரின் கைகளுக்குத்தான் சென்றது. இந்தியா தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டுமென்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனை. இந்தியா இந்து நாடாகத்தான் இருக்கவேண்டும். இங்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என முதலில் கூறியவர் சாவர்க்கர். பிரிவினை வாதத்திற்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் இவர். மாநிலங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது தான் பிரிந்து செல்ல வேண்டும் என்ற சூழல் உரு வாகிறது. மாநில உரிமைகள் பாதுகாக்கப் பட்டால் வேறு எந்தப் பிரச்சனையும் எழுவதற்கு வாய்ப்பில்லை. கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்ச னைகளை நிறைவேற்றுவதை அனுதினமும் மக்களோடு தொடர்புடைய மாநில அரசால் தான் செய்ய முடியும். மொழி உரிமை என்பது மாநில அரசின் உரிமை மட்டு மல்ல; அது இந்திய மக்களுக்கான உரிமை. நாடு முழுவதும் இந்தி திணிப்பு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தினால் இந்தி மொழி வளர்ச்சி பின்தங்கித்தான் உள்ளது. ஒன்றிய அரசு இந்தியை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
மார்க்சிஸ்ட்டுகளின் தனித்துவம்
திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வரு மான கலைஞர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானம் தான் நமக்குக் கையில் உள்ள ஆயுதம். மாநில உரிமைகள், சுயாட்சிக்காகத் தமிழகத்தில் திமுக குரல் கொடுக்கும், கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பார்கள். ஆனால், மாநிலங்களின் உரிமை என்ற விஷயத்தை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும். அதைச் சாத்தியமாக்க வேண்டும்.