tamilnadu

img

பஞ்சு, நூல் விலை உயர்வால் தையல் கலைஞர்கள் கடும் பாதிப்பு

இராஜபாளையம், ஜூன் 8- பஞ்சு, நூல் விலை உயர்வு காரண மாக ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கம் தமிழகத்தில் உள்ள அனை த்து தையல் கலைஞர்களையும் பாதி த்துள்ளது என இராஜபாளையத்தில் நடைபெற்ற தையல் கலைஞர்கள் மாநில மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். இராஜபாளையத்தில் தமிழ்நாடு  தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) 6வது மாநில மாநாடு செவ் வாயன்று தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க் கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கத்தில் கோரி க்கைகளை வலியுறுத்தி தையல் கலை ஞர்கள் பேரணி நடத்தினர். காந்தி சிலை முன்பாக திரண்ட அவர்கள், கோரி க்கைகளை முழக்கமிட்டவாறு ரயில் வே பீடர் சாலை வழியாக மாநாடு நடக்கும் மண்டபம் வரை வந்தனர். தொடக்கத்தில் 6 வது மாநாடு குறித்த மலரை சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் வெளியிட, சம்மேளன செயலாளர் சந்திரகலா பெற்றுக் கொண்டார்.

பின்னர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், கடைகளில் பணியாற்றும் தையல் கலைஞர்களுக்கு அரசு இலவச மின்சா ரம் வழங்க வேண்டும். வீட்டில்  வைத்து பணியாற்றும் கலைஞர் களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும். ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் மற்றும் சலு கைகள் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தையல் கலைஞர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். தொழி லாளர்கள் மற்றும் மக்களை பாதிக்கும் வாகன எரிபொருள் உயர்வை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்வதை கை விட வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக அ. சவுந்தரராசன் அளித்த பேட்டியில், “போதுமான பணம் அரசு ஒதுக்கீடு செய்யாத கார ணத்தால் நலவாரியம் மூலம் அறி வித்துள்ள சலுகைகள் தொழிலாளர் களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படு கிறது. தையல் கலைஞர்களின் ஓய்வூதி யத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

ஒன்றிய அரசும் மாநில அரசும்  இணைந்து முறைசாரா தொழிலாளர் களுக்கு ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித் தொழில் பாதிப்புக்கு உள்ளாகி இருக் கிறது. விசைத்தறி, பனியன் மற்றும்  நூல் உற்பத்தியாளர்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். லட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவு மற்றும் நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள சுணக்கம் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தையல் கலைஞர்களையும் பாதித்துள் ளது. இதனால் வேலையின்றி, வரு மானமின்றி தையல் கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் துயரத்தில் உள்ளது.

ஜவுளித் தொழிலை  காப்பாற்ற நூல், பஞ்சு விலை உயர்வை கட்டுப் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்கள் ஓரிடத்தில் மொத்தமாக பணி யாற்றும் தனியார் ஆலைகளில் தொழி லாளர்களுக்கான அடிப்படை சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் 91 கூட்டு றவு சொசைட்டி களில் அரசு பள்ளி  மாணவர்களுக்கான இலவச சீருடை உள்ளிட்டவைகளை தைத்து வழங்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த சொசைட்டிகள் ஜனநாயகப் பூர்வமாக நடக்க வேண்டும். இதில்  தவறு ஏற்படும் பட்சத்தில் லட்சக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும்” என்று குறிப்பிட்டார். 

மாநாடு

மாநாட்டிற்கு சம்மேளனத்தின் தலைவர் பி.சுந்தரம் தலைமை தாங்கி னார். சங்கக் கொடியை  ஜெகதீசன் ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஜி.கணேசன் வரவேற் றார். சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் சி.மாரிக்கண்ணு அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.    மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் உரையாற்றினார். பொதுச்செய லாளர் எம்.ஐடா ஹெலன் வேலை  அறிக்கையும் மாநிலப் பொருளாளர் ஆர். மாலதி வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர்கள் பி.என்.தேவா, தங்கமோகன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில கன்வீனர் எம். தனலட்சுமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம். மகாலட்சுமி சிறப்புரையாற்றினார் .  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் உரையாற்றினார்.  வர வேற்புக் குழு செயலாளர் எம். சாராள்  நன்றி கூறினார். 

புதிய நிர்வாகிகள் 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக பி.சுந்தரம், பொதுச் செயலாளராக எம்.ஐடா ஹெலன், பொருளாளராக ஆர். மாலதி, துணைப் பொதுச்செயலாளர்களாக எஸ். சந்தியாகு, மாரிக்கண்ணு, வி.சந்திர கலா, செயலாளர்களாக எம்.சாராள் பி. பொன்ராஜ், ஜி.குணசேகர், சி.மூர்த்தி, சித்ரா, துணை தலைவர்களாக ஆர். மனோகரன் பி.கோவிந்தசாமி, ஆர்.ஜோசப், எஸ்.பிரமீளா, எஸ்.ராஜேந்திரன் உட்பட 61 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.