tamilnadu

img

ராமானுஜரின் ‘சமத்துவ சிலை’ தேச ஒருமைப்பாட்டின் அடையாளம்

சென்னை, பிப். 5  ஐதராபாத்தில் அமைக்கப் பட்டுள்ள ராமானுஜரின் “சமத்துவ சிலையானது” தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்று முதல்வர்  ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் நேரில் சந்தித்து, தெலுங்கானா மாநிலத்தில் நடை பெறும் ராமானுஜரின் பொற்சிலைத் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சிலை திறப்பு  விழாவையோட்டி, அவருக்கு முதல் வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், “ராமானுஜரின் பொற் சிலைத் திறக்கப்படும்  தருணத்தில், ராமானுஜர்  சமத்துவக் குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சி யோடும் ஒலிக்க வேண்டும். சமத்து வத்தின் சிலை என்னும் இந்த அடை யாளம், அனைவரையும் உள்ளடக்கி  ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத் தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். மறைந்த எங்கள் தலைவர் கருணாநிதி ராமானுஜர் தொடர்பாக எழுதிய தொலைக்காட்சி தொடர்  எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து  அடுத்து வரும் தலைமுறைகளிடம், குறிப்பாக நம் நாட்டின் இளைஞர்  திரளிடம் ராமானுஜர் என்னும் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.

ராமானுஜர் பரப்பிய சீர்திருத் தங்கள் எங்களது நெஞ்சுக்கும் நெருக்கமானவைதாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான், அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர் களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து, தமிழ்நாட்டுக் கோயில்களின் கருவறையில் பூசை  செய்வதில் சமத்துவத்தை உறுதிசெய்துள்ளது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில், மாநி லத்தில் கோயில்களின் நிர்வாகம் முறையாக்கப்பட்டு, மாநிலம் முழு வதும் உள்ள கோயில்களின் சிறப்பான நிர்வாகத்துக்குத் தேவை யான நிதியினை ஒதுக்கியிருப் பதோடு கோயில் பூசாரிகளின் நலன்களையும் காத்து வருகிறோம். தங்களது நிகழ்வு பெரும் வெற்றி யடைய எனது மனபூர்வமான வாழ்த்துகளையும் ராமானுஜரின் “சமத்துவ சிலை” என்ற இந்த அடை யாளம், தேச ஒருமைப்பாட்டின் அடை யாளமாகத் திகழ வேண்டும் என்ற  எனது விருப்பத்தையும் தெரிவித்து க்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.