‘புனைவிலக்கிய நதியில் நீந்தி…’ என்ற பேரா. பெ.விஜயகுமாரின் கட்டுரைத் தொகுப்பு பன்னிரெண்டு நாவல்கள் உள் ளிட்ட பதினாறு புத்தகங்களை அறிமுகம் செய்கிறது. எடுத்துக் கொண்ட புத்தகங்களை மட்டும் அறிமுகம் செய்வதோடு நின்று விடாமல், இந்நூல் அப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களையும் அற்புதமாக அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு கட்டுரை யும், புத்தக அறிமுகத்தைத் தொடங்குவ தற்கு முன்னர் அவ்வாசிரியர்களின் பிற படைப்புகள் குறித்தும், அதே போன்ற படைப்புகளை எழுதிய பிற ஆசிரியர்கள் குறித்தும் சுருக்கமாக ஆனால் அழகான வரைகோட்டுச் சித்திரத்தை வழங்குகிறது. இதனை புத்தக அறிமுகத்திற்கான ஓர் இலக்கணமாக பேரா.விஜயகுமார் வகுத்துக் கொண்டுள்ளது பாராட்டுக்குரி யது. புனைவிலக்கியத்தில் பரந்த வாசிப்பும் ஆழமான புரிதலுமின்றி இது சாத்திய மில்லை.
அன்புள்ள ஏவாளுக்கு
முதல் கட்டுரை அலிஸ் வாக்கரின் ‘தி கலர் பர்ப்பிள்’ என்ற நாவலை அறிமுகப் படுத்துகிறது. அலிஸ் வாக்கர் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவ மிக்கவர்; அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு போராளியும் கூட; இராக் போர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்; இனவெறி பிடித்த இஸ்ரேல் மீது தனக்கிருந்த எதிர்ப்பின் காரணமாக தன் நாவலை ஹிப்ரு மொழியில் மட்டும் மொழிபெயர்க்க அனுமதி மறுத்தவர். தன் அம்மாவின் இரண்டாம் கணவ னின் காம இச்சைக்குத் தொடர்ந்து பலியா கும் செலி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். அக்குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டதாக பொய் சொல்லும் அக்கயவன் அக்குழந்தைக ளை விற்றுவிடுகிறான். செலியின் தங்கை யைப் பெண் கேட்டு வரும் ஆல்பெர்ட் என்பவனுக்கு செலி மணம் செய்து வைக்கப்படுகிறாள். அவனது முதல் மனைவியின் குழந்தைகளுக்கு ஆயா வாகவும், பாலியல் தேவைக்கான கருவி யாகவுமே செலி நடத்தப்படுகிறாள். தாய் இறந்தவுடன் செலியோடு வாழவந்த அவள் தங்கை நெட்டியை அனுபவிக்க ஆல்பெர்ட் துடிக்கிறான். அவனிடமிருந்து தப்ப நெட்டி வீட்டைவிட்டு வெளியேறு கிறாள். ஆல்பெர்ட்டின் காதலி சக்ஆவரி யால் ஈர்க்கப்பட்டு அவளுடன் செலி ஓரி னச்சேர்க்கையில் இன்பம் காண்கிறாள். சக் ஆவரி மற்றும் ஆல்பெர்ட்டின் மருமகள் சோபியா இருவருடன் ஏற்பட்ட நட்பு செலிக்கு துணிச்சலைக் கற்றுத்தருகிறது. அவள் பழைய அப்பாவி பெண்ணல்ல என்பதோடு தையற்கலையில் தேர்ச்சி பெற்று மிகப்பெரிய ஆடை டிசைனராக பிர பலமடைகிறாள். இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நெட்டி, சாமுவேல்-கொரின் தம்பதியிடம் அடைக்கலம் அடை கிறாள். அவர்களின் இரு வளர்ப்புக் குழந்தைகளுக்கு ஆயாவாக பொறுப்பேற் கிறாள். அக்குழந்தைகள் இருவரும் செலி யின் குழந்தைகள் என்று தெரிகிறது. அக்காவும் தங்கையும் முப்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணை கிறார்கள். இதுதான் புக்கர் பரிசு பெற்ற இந்நாவலின் கதைச் சுருக்கம். (90) கடிதங்கள் மூலம் நாவலைச் சொல்லும் உத்தியில் அலிஸ் பெரும் வெற்றி பெறு கிறார். சக் ஆவரி, சோபியா, நெட்டி போன்ற கருப்பினப் பெண்கள் தங்கள் குடும்ப ஆண்களிடமிருந்து விடுதலை பெறக் கலகம் செய்வதை உணர்ச்சிப் பூர்வமாக நாவல் சித்தரிப்பது மற்றுமொறு சிறப்பு. அழுகையிலிருந்து நெருப்புக்கு உயரும் இந்நெடுங்கதையை ‘அன்புள்ள ஏவாளுக்கு’ என்று தலைப்பிட்டு அழகு தமிழில் ஹஜிதா மொழிபெயர்த்துள்ளார்.
காட்டில் உரிமை
வரலாற்று நிகழ்வை புனைகதையாக மாற்றுவது சவாலான செயல். அதிலும் பொருள்முதல்வாத நோக்கில் வர லாற்றைக் கண்டறிய விரும்பும் மகா சுவேதாதேவி மீது அது கூடுதலான பொறுப்பைச் சுமத்துகிறது என்ற அறி முகத் தொடக்கம் மேற்குவங்க எழுத்தாளர் மகாசுவேதாதேவியை யாரென்று அடையாளம் காட்டி விடுகிறது. சாகித்திய அகாடமியின் பரிசு பெற்ற ‘ஆரண்யெர் அதிகார்’ என்ற மகாசுவேதாதேவியின் நாவலை ‘காட்டில் உரிமை’ என்ற பெயரில் சு.கிருஷ்ணமூர்த்தி தமிழில் அழகாக மொழி பெயர்த்துள்ளார். தங்களின் வாழ்வு ரிமைக்காக ஆங்கிலேய ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பீர்ஸாமுண்டா என்ற பழங்குடியின இளை ஞனின் வீரவரலாறை இந்நாவல் பேசு கிறது. சோட்டா நாக்பூர் பகுதியிலிருந்த காடுகளும் மலைகளும் முண்டாக்கள் காலங்காலமாக வாழ்ந்துவந்த இடம். ஆரண்ய மாதா அவர்கள் வணங்கும் தெய்வம். காட்டு வளங்களை கொள்ளை யடிக்கும் நோக்கத்தோடு ஆங்கில ஏகாதி பத்தியம் இராணுவத்தின் துணை கொண்டு பழங்குடி மக்களை அவர்களின் வாழ்வி டத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றது. காட்டில் உரிமை என்ற ஒற்றைக் கோரிக் கையின் பின்னால், பீர்ஸா மக்களைத் திரட்டி களம் காண்கிறான். வில்லையும் அம்பையும் மட்டுமே கொண்ட பழங்குடி மக்கள் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தை துணிவோடு எதிர்த்து நின்றனர். இறுதி யில் பீர்ஸா கைது செய்யப்பட்டு கை, இடுப்பு, கால்களில் சங்கிலியிட்டு தனிமைச் சிறையில் ஓராண்டாக அடைக்கப்பட்டு, நோய்வாய்ப்படுகிறான். சிறை நிர்வாகம் மருத்துவ உதவி எதுவும் தராத நிலையில் அந்த மாவீரன் இறந்து போகிறான்.
ஆசாதி
இந்திய பிரிவினையின் போது ஏற்பட்ட 1947-48 கால நிகழ்வுகளை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறை வெறியாட்டங்களை, கோர மரணங்களை, பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பாலியல் கொடூரங்களை, மனித குலத் தையே தலைகுனிய வைத்த அவமானங்க ளை இந்திய - ஆங்கில எழுத்தாளர்கள் தங்களின் புனைவுகளால் உலகறிய செய்துள்ளனர். அந்த வரிசையில், சாமன் நஹலின் ஆசாதியும் ஒன்று. பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய பெருந் திரள் ஒன்று எண்பது மைலுக்கு மேல் தூரத்தை நடந்தே கடந்து இந்திய எல்லைக் குள் வருகிறது. அப்பயணத்தின் போது அவர்கள் சந்தித்த கொடுமைகளை ஆசாதி உணர்ச்சிப்பெருக்கோடு சொல்கிறது.
ரெயில் பெட்டி வகுப்பறைகள்
ஆறு ரெயில் பெட்டிகள் - ஆம்! அவை தான் அந்த பள்ளியின் வகுப்பறைகள் - அந்த பள்ளிக்கு ஏழாவது ரயில்பெட்டி வந்து சேர்ந்தது. இரவு வந்து சேர இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு மகிழ்ந்திட பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அன்றி ரவு பள்ளியிலேயே தங்கினர். பள்ளியில் இரவைக் கழித்த அந்த அனுபவம் குழந்தைகளுக்கு அலாதியானது. ஏழா வது ரெயில் பெட்டி பள்ளியின் நூலகமா னது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோபயாஷி என்பவர் நிறுவிய ‘டோமோயி’ என்ற அப்பள்ளியில், வகுப்பறை மட்டு மல்ல கற்பித்தலும், மாணவர் மீதான பார்வையும், அணுகுமுறையும் கூட புது மையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த பள்ளி பற்றிய தன் நினைவுகளை டோட்டா ஜான் எனும் சிறுமியின் அனுப வங்களாக வடித்திருக்கிறார் டெட்சுகோ குரோயாநாகி. ‘டோட்டா ஜான்’ எனும் அந்த ஜப்பானிய நாவலின் ஆங்கில பதிப்பிலிருந்து ‘ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற சுவைமிக்கத் தமிழ் நாவலாக வள்ளி நாயகம் மற்றும் பிரபாகர் இருவரும் இணைந்து அழகுற தந்திருக்கிறார்கள். கல்வியில் அக்கறையுள்ள ஒவ்வொரு வரும் படித்திட வேண்டிய நாவல் இது என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதில் வியப்பேதுமில்லை.
தோப்பில்
இந்நூல் தோப்பில் முகம்மது மீரா னின் ‘அஞ்சுவண்ணம் தெருவை’ அறி முகப்படுத்துகிறது. ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், தோப்பில் முகம்மது மீரான். மலையாள மகாராஜா ஒருவனின் காம இச்சைக்குப் பலியாவதைத் தவிர்க்க உயிரோடு புதைகுழியில் இறங்கிய ஒரு பெண் அஞ்சுவண்ணம் தெருவின் காவல் தெய்வமாகிப் போனாள். இரு நூறு ஆண்டுகால முந்தைய இந்த வர லாற்று நிகழ்வோடு தொடங்குகிற இந்நாவல், தறிகளின் சத்தமும் தைக்கா பள்ளிவாசலின் பாங்கு ஓசையும் எப்போ தும் ஒலித்துக்கொண்டே இருக்கும் அஞ்சுவண்ணம் தெரு மக்களின் கதைக ளை யதார்த்தமாகப் பேசுகிறது. கதைக ளின் ஊடே சமகால வரலாறான 1992ல் பாபர்மசூதி இடிக்கபட்ட கொடுமையையும், அதனை இந்திய ராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்த அவலத்தையும் தோப்பில் பதிவு செய்கிறார். அஞ்சுவ ண்ணம் தெரு போன்ற தெருக்கள் இன்றும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் அத்தெருக்களின் கதைகளை எழுத இன்று தோப்பில் நம்மிடையே இல்லை என்ற சோகம் நம்மைக் கவ்விக் கொள்கிறது.
இப்படியாக ‘புனைவிலக்கிய நதியில் நீந்தி…. ‘ புத்தகத்தைப் படித்து முடிக்கிற போது, அது அறிமுகம் செய்கிற அனைத்து நூல்களையும் முழுமையாகப் படித்து முடித்த நிறைவு ஏற்படுகிறது. இங்குதான் பேரா. பெ. விஜயகுமாரின் எழுத்து வெற்றி பெறுகிறது; அவருடைய இலக்கிய காதலுக்கும் பரந்த வாசிப்பு அனுபவத்திற்கும் கட்டியம் கூறுகிறது. செம்மலரில் தொடர்ந்து புத்தகங்களை அறிமுகம் செய்து வருகிற அவரின், ‘வாசிப்பிற்கு திசையில்லை’ என்ற இன் னொரு கட்டுரைத் தொகுப்பும் வெளி வந்துள்ளது. அன்றாட இயந்திர வாழ்ககை யில் நெடிய நாவல்களை வாசிப்பதற்கு இய லாதவர்கள் இலக்கிய நதியில் நீந்த இது போன்ற படைப்புக்கள் துடுப்புக்களாக அமையும் என்பதில் ஐயமில்லை.