ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் பின்னே நின்று கொண்டு சுவாமி விவேகானந்தரைப் பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால் 1893 இல் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்ற விவேகானந்தர் என்ன பேசினார் தெரியுமா? “தங்கள் மதத்தை உயர்வாக கருதிக்கொண்டு, பிற மதங்களை இழிவாக கருதி அழிக்க முயல்பவர்களைப் பார்த்தால், நான் அவர்களுக்காக எனது இதயத்தின் ஆழத்திலிருந்து கவலை கொள்கிறேன். அனைத்து நதிகளும் கடலில் கலப்பதை போல எல்லா மதங்களும் மானுடத்தையே நேசிக்கின்றன” என்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.