117 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம், ஜூன் 28- கர்நாடக அணைகளிலி ருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணை யின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 60 ஆயிரத்து 740 கன அடி விகிதம் வந்துகொண் டிருந்த தண்ணீர், சனிக்கிழ மையன்று காலை விநா டிக்கு 73 ஆயிரத்து 452 கன அடியாகவும் பிற்பகலில் 80 ஆயிரத்து 984 கன அடியாக வும் அதிகரித்தது. இதனால், 112.73 அடி யாக இருந்த மேட்டூர் அணை யின் நீர்மட்டம் சனிக்கிழமை யன்று பிற்பகல் 117.39 அடி யாக உயர்ந்தது. கடந்த இரண்டு நாட்க ளில் மட்டும் அணையின் நீர் மட்டம் 5 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகு படிக்காக விநாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்வரத்து தொடர்ந்தால், ஒரு வாரத்திற் குள் மேட்டூர் அணை வர லாற்றில் 45-ஆவது ஆண் டாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.