tamilnadu

img

உச்சநீதிமன்றத் தீர்ப்பு இயற்கை நீதிக்கு மாறானது ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பு இயற்கை நீதிக்கு மாறானது ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை, செப். 2 - ஆசிரியர் தகுதித் தேர்வு விஷயத்தில், இயற்கை நீதிக்கு மாறாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,  தமிழக ஆசிரியர்களின் பணிப்பாது காப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வா? அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரி யவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரு வதற்கு முன்பாக ஆசிரியராக பணி யில் சேர்ந்தவர்கள் அடுத்த 2 ஆண்டு களுக்குள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்;  இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களை பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதிய பலன் வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான முறையில் தீர்ப்பளித்துள்ளது. சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்துவதா? இதில் 55 வயதைத் தாண்டிய ஆசிரி யர்களுக்கு மட்டும் டெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களையும் இத்தீர்ப்பு நிலைகுலைய செய்துள்ளது. மேலும், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பதவி உயர்வுக் கும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு அதாவது அதற்கு 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற வர்கள் கூட தற்போது தங்கள் பணியைத் தொடருவதற்கு தகு தித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது இய ற்கை நீதிக்கு மாறாக உள்ளது. தமிழகத்தில் 1.5 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலமாக பணிப் பாதுகாப்பற்ற சூழல் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர் களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு சட்டம் அல்லது அரசாணை அது நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து தான்  அமல்படுத்தப்பட வேண்டும்.  ஆனால், அதைப் பல ஆண்டு கள் முன்தேதியிட்டு நடைமுறைப் படுத்துவது என்பது தவறான முன்னு தாரணமாக அமைந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக உடனடியாக தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  சீராய்வு மனு அல்லது  தனி தகுதித் தேர்வு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு  தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப் பட்டுள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும், ஒரு வேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட தமிழ்நாடு அரசு பணியில் உள்ள ஆசிரி யர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு (special TET) நடத்திட வேண்டு மென்றும், அத்தேர்வில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு உரிய வாய்ப்புகளை கூடுதலாக ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.