tamilnadu

img

தமிழகத்தில் காலியாக இருக்கும் 327 மாவட்ட நீதிபதி பணியிடங்கள்!

சென்னை, நவ. 14 - தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங் களில் காலியாக உள்ள 327 நீதிபதிகளின் பணியிடங்களை கால நிா்ணயம் செய்து  நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் அனும திக்கப்பட்ட 1,369 கீழமை நீதிபதிகள் பணி யிடங்கள் உள்ளதாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி வரையில் அதில் 327 (23 சதவிகிதம்) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னை உயா் நீதிமன்ற பதிவாளா் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  மேலும், ‘அனுமதிக்கப்பட்ட 349 மாவட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 84 பணியிடங்களும், 364 மூத்த சிவில் நீதிபதிகளில் 77 பணியிடங்களும், 656 ஜூனியா் சிவில் நீதிபதிகளில் 166 பணியிடங்களும் காலியாக உள்ளன என்றும் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில், டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, மாவட்ட நீதிபதிகளுக்கான காலிப் பணியிடங்களை 2024, மாா்ச் 31க்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.