tamilnadu

img

கார்ப்பரேட்டுகளுக்காக சிதைக்கப்படும் தொழிலாளர் சட்டங்கள்

கோழிக்கோடு, டிச.25- நிதி வழங்கும் கார்ப்ப ரேட் நிறுவனங்களின் நலன்க ளை பாதுகாக்க, தொழிலா ளர் சட்டங்களை மோடி அரசு சிதைத்துள்ளது என்று சமூக ஆர்வலரும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞருமான பிர சாந்த் பூஷண் குற்றம்சாட்டி னார். தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டது, தொழிலா ளர் நலனுக்காகவும், பணிப் பாதுகாப்புக்காகவும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் எல்லாமே சிதைக் கப்படுகின்றன. நிரந்தரப் பணிக்கு பதிலாக ஒப்பந்த வேலைகள் அரசால் ஊக்கு விக்கப்படுகிறது. அரசு வேலைகளில் கூட ஒப்பந்தம் செய்வது அதிகரித்து வருகி றது. இது தொழிலாளர்களின் உரிமைகளை அழிப்பதாக வும் அவர் கூறினார். அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இந்திய தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு மாநி லக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை பிரசாந்த் பூஷன் தொடங்கி வைத்துப் பேசினார். மாநில தலைவர் ஜோதிவாஸ் பரவூர் தலைமை வகித்தார்.