tamilnadu

img

அலங்காநல்லூர் கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்கள், மாதர் சங்கம் ஆதரவு

மதுரை, ஜன.4- மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அர வையை துவக்ககோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 14.12.2021 அன்று முதல் மாநிலத் தலை வர் என்.பழனிச்சாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. திங்களன்று 21 ஆவது நாள் போராட்டத்தை அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் ஆதரித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். போராட்டத்தை ஆதரித்து சம் மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ராஜேந்திரன், அரசு போக்குவரத்து மத்திய சங்க தலைவர் பி.எம். அழ கர்சாமி ஆகியோர் பேசினர் .போராட் டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக போராட்ட நிதியாக ரூ.2 ஆயிரம் போராட்டக்குழு தலைவர் என்.பழனிச்சாமியிடம் வழங் கப்பட்டது.

மாதர் சங்கம் -முன்னாள் அமைச்சர் ஆதரவு

ஜனவரி 4 செவ்வாயன்று நடை பெற்ற போராட்டத்தில் கரும்பு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என்.ஸ்டா லின்குமார், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் அடைக்கன், சுபாஷ், பி. போஸ், ராம்ராஜ், சுப்ரமணி, பெரு மாள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் எஸ்.முருகன் உள்ளிட்டோர் ஈடு பட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாநிலச் செய லாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் க.பிரேமலதா, மாவட்டச் செயலாளர் செ.முத்து ராணி, மாவட்ட நிர்வாகி மோகன விஜயா ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்  முன்னாள் அமைச்சரும் தற்போ தைய திருமங்கலம் சட்டமன்ற உறுப்பி னருமான ஆர்.பி. உதயகுமார், உசி லம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப் பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.வி.கருப்பையா மற்றும் அலங்கா நல்லூர், செல்லம்பட்டி, சேடபட்டி, வாடிப்பட்டி வடக்கு மற்றும் தெற்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளின் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவினை தெரி வித்து கலந்து கொண்டனர்.