tamilnadu

img

அமெரிக்க சதிகளை முறியடித்தவர் சுலைமானி

டமாஸ்கஸ், ஜன.7- மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையில் முரண்பாடுக ளை ஏற்படுத்துவதோடு, உள்நாட்டுக் குழப்பங்களை உருவாக்கும் அமெ ரிக்காவின் முயற்சியை முறியடித்த வர் ஈரான் ராணுவத்தளபதி காசிம் சுலைமானி என்று சிரியாவின் ஜனாதி பதி அஸ்ஸாத் புகழாரம் சூட்டியுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதியன்று இராக் பயணத்தை சுலை மானி மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவின் ஆளில்லா குட்டி விமானம் மூலமான தாக்குதலில் கொல்லப்பட்டார். உலக நாடுகள் முழுவதும் இதற்குக் கண்டனம் தெரி வித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டின என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வந்த அனை த்து பயங்கரவாத அமைப்புகளுக் கும் சுலைமானி பெரும் எதிரியாக இருந்தார்.

அவர் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், உல கின் பல நாடுகளின் தலைவர்கள் மேற்காசியாவில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அவ ரது செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ள சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத், “இந்தப் பகுதி யில் நாடுகளுக்கிடையில் முரண்பாடு களை ஏற்படுத்தும் அமெரிக்காவின் உத்தி தோற்றுப் போனதற்கு ஈரான் ஜெனரல் சுலைமானிதான் காரணம்.” என்று கூறியுள்ளார்.

சுலைமானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிரிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் டமாஸ்கசில் நடந்த இந்த நிகழ்வில் ஜனாதிபதி அஸ்ஸாத்தின் உரை வாசிக்கப்பட்டது. அந்த உரையில், “தனது ஒவ்வொரு திட்டத்திலும் முரண்பாடு களை விதைக்கும் மற்றும் இந்தப் பகுதியில் உள்நாட்டில் தேசத்துரோக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் உத்திகளை சுலை மானி முறியடித்து வந்தார். மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நலன் களுக்கு அவர் ஆபத்தாக இருந்து வந்தார் “ என்று குறிப்பிட்டார். ஈரானுடனான ஒத்துழைப்பு சிரியா தொடரும் என்று உறுதிய ளித்த அவர், சுலைமானின் கொலை யாளிகள் தப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.இராக் தலைநகர் பாக்தாத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.