tamilnadu

img

ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்குக!

சென்னை, மார்ச் 24 - ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம்  ரூபாய் வழங்கக் கோரி  சென்னையில் வியாழனன்று (மார்ச் 24) கரும்பு விவ சாயிகள் போராட்டம் நடத்தினர். வருவாய் பங்கீட்டு முறை சட்டத் தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரி லேயே ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் பரிந்துரை விலையை (எஸ்ஏ பி) அறிவித்து ஒரு டன் கரும்பிற்கு 4  ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற பேரணி, ஆர்ப்பா ட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் தலைவர் என். பழனிச்சாமி தலைமை தாங்கினார். பின்னர்  சங்கத்தின் பொதுச் செயலா ளர் டி.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் நிதிநிலை அறிக் கையில் கரும்புக்கு எதிர்பார்த்த விலையை மாநில அரசு அறிவிக்க வில்லை. 2018ஆம் ஆண்டு அதிமுக அரசு மாநிலப் பரிந்துரை விலையை (எஸ்ஏபி) நிறுத்திவிட்டது. அதற்கு  மாறாக, ஒன்றிய அரசின் ஆணைப்படி வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் கடந்த  4 ஆண்டுகளாக எஸ்ஏபி நிறுத்தப் பட்டு, ஊக்கத் தொகை மட்டும் தரப்படுகிறது. அரசு கொடுப்பது ஊக்கத்தொகை. விவசாயிகள் கேட் பது கரும்புக்கான விலை. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் அறி வித்ததை போன்று டன் கரும்புக்கு 4  ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். எனவே, மாநில அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே வரு வாய் பங்கீட்டு முறைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எஸ்ஏபியை அறி வித்து, கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஊக்கத் தொகையை 2.50 ரூபாய் அளவிற்கு உயர்த்தி இருப்பது திருப்தி அளிக்க வில்லை. எனவே, எஸ்ஏபி மற்றும் கூடு தல் விலையை அறிவிக்கவேண்டும்.

ரூ.800 கோடி பாக்கி

அம்பிகா, ஆரூரான், தரணி, அரு ணாச்சலா உள்ளிட்ட 8 சர்க்கரை ஆலைகள் தேசிய கடன் தீர்ப்பாயத்  திற்கு சென்றுவிட்டன. இந்த ஆலை கள் விவசாயிகளுக்கு 800 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இதனை அரசு பெற்றுத்தரவேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புனரமைத்து மேம்படுத்தவேண்டும், தனியார் ஆலைகள் தர வேண்டிய எஸ்ஏபி பாக்கியை பெற்றுத்தர வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை  ஆலைகள் கொடுக்கா மல் உள்ளன. இதனால், கடந்த 10  ஆண்டுகளில் கரும்பு சாகுபடி குறைந்து, சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி  அடைந்துள்ளது. 23 லட்சம் டன் சர்க்க ரை உற்பத்தியான நிலையில், தற் போது 9 லட்சம் டன்னாக குறைந்துள் ளது. இந்த வீழ்ச்சியிலிருந்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க மேற் கண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா ளர் பெ.சண்முகம், “டன் கரும்புக்கு 4ஆயிரம் ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு முன்பாக சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசினார். அதற்கும், நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது” என்றார். “மாநில அரசு கடந்தாண்டு 192.50 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுத்தது. இப்போது 2.50 ரூபாய் உயத்தி 195 ரூபாய் என அறிவித்துள்ள னர். பொட்டாஷ் உரம் 50 கிலோ  மூட்டை ஆயிரம் ரூபாய் உயர்ந்துள் ளது. பெட்ரோல்-டீசல் விலை, வெட்டுக் கூலி விலை, லாரி வாடகை உயர்ந்துள் ளது. உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில் டன்னுக்கு 2.50  ரூபாய் உயர்த்தி இருப்பது நியாயமா?  போதுமானதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அலங்காநல்லூர்  சர்க்கரை ஆலை

“அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தி னோம். இது தொடர்பாக அமைச்சர் களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில்  கொடுத்த வாக்குறுதியைக் கூட நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வில்லை. தென்மாவட்ட மக்கள் நலன்  கருதி அந்த ஆலையை திறக்கவேண் டும். தனியார் ஆலை முதலாளிகளை நிர்பந்தித்து ஆலைகளை திறக்கவே ண்டும் அல்லது அவற்றை அரசு கையகப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சாமி.நடராஜன், துளசி நாராயணன், கரும்பு விவசாயிகள் சங்க பொருளாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பேசினர்.