பாலாசோர்,டிச.13- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) டிசம்பர் 13 திங்கள்கிழமையன்று நீண்ட தூர சூப்பர்சோனிக் ஏவு கணை உதவி டார்பிடோவை (ஸ்மார்ட்) சோதித்தது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இருந்து இந்த சோத னை நடத்தப்பட்டது. இந்த அமைப்பு அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான ஸ்டாண்ட்ஆஃப் டார்பிடோ டெலிவரி அமைப்பாகும். சோதனையின் போது, ஏவுகணையின் முழு வீச்சு திறன் வெற்றிகரமாக நிரூ பிக்கப்பட்டது. டார்பிடோவின் வழக்க மான வரம்பிற்கு அப்பால் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த அமைப்பு வடி வமைக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும். இந்த கேனி ஸ்டர் அடிப்படையிலான ஏவுகணை அமைப்பு மேம்பட்ட தொழில்நுட் பங்களைக் கொண்டுள்ளது. இந்த ஏவுகணை தரை மொபைல் லாஞ்ச ரில் இருந்து ஏவப்படுகிறது, மேலும் இது பல மைல் தூரங்களை கடக்கும். பல டிஆர்டிஓ (DRDO) ஆய்வகங் கள் இந்த மேம்பட்ட ஏவுகணை அமைப்புக்கு பல்வேறு தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளன. இந்திய கடற்படையினர் பயன் படுத்தும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.