tamilnadu

புதுச்சேரியில் நல்லிணக்கத்தை கெடுக்கும் துணை நிலை ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி,மார்ச் 19- புதுச்சேரி பிரதேசத்தில்  அமைதி, நல்லிணக் கத்தை கெடுக்கும் துணை நிலை ஆளுநர், முதல்வரின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வரு மாறு:- சமீபத்தில் வெளியான இரண்டு திரைப் படங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஒன்று, மணிகண்டன் இயக்கிய தமிழ் மொழி திரைப்படமான “கடைசி விவசாயி”. இன் னொன்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சக்தி களால் தூக்கிப்பிடிக்கப்படும்  விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தித்  திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ். அழிந்துகொண்டிருக்கும் விவசாயப் பண் பாட்டையும் சிதைந்து கொண்டிருக்கும் விவசாயி களின் வாழ்வையும் புனைவென்னும் பூச்சே இல்லாமல் அழுத்தமாகப் பேசியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. உசிலம்பட்டியைச் சுற்றிய கிராமங்களுக்கு அப்படியே நம்மை அழைத்துச் செல்லும் அப்படம் விவசாயிகளின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவராலும் பாராட்டப்படுகிறது.

விவசாயிகளின் வீரம் செறிந்த தில்லி முற்றுகைப் போராட்டத்தின் பின்னணியில் அப்படம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், காஷ்மீர் ஃபைல்ஸ் படம் அப்படி அல்ல.காஷ்மீரத்தைச் சேர்ந்த புரோகிதர்க ளான பண்டிட்டுக்கள் அங்கே ஊடுருவியுள்ள தீவிரவாதத்தால் தங்கள் வீடுகளையும் மாநி லத்தையும் விட்டு வெளியேறிய துயரத்தை  பார்ப்பவர் மனம் உருகும்படி உணர்ச்சிகரமாகப் பேசுகிறது. பண்டிட்டுகள் வெளியேறும்போது அவர்க ளின் வீட்டுச் சாவிகளை அண்டை வீட்டாரான இஸ்லாமியக் குடும்பத்தாரிடம்தான் நம்பிக்கை யுடன் ஒப்படைத்து வந்ததாக வரலாறு இருக்கிறது. ஆனால் இந்தப்படம் ஒட்டுமொத்தக் காஷ்மீர் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து வரலாற்றில் உண்மைகளையும் திரித்துக்கூறி ஷேக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் மக்கள் தலைவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தைக் கணக்கிலேயே கொள்ளாமல் அவர்களையெல்லாம் விரோதிகளாகச் சித்தரிக்கிறது.இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை அப்பட்டமாகத் தூண்டக்கூடிய படமாக அது வெளியாகியுள்ளது.

பாஜகவைத் தவிர நாட்டின் அத்தனை ஜனநாயக சக்திக ளும் அப்படத்துக்குக் கண்டனத்தைத் தெரி வித்துள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநில துணை நிலை  ஆளுநரும், மாநில முதலமைச்சரும் இந்த மதப் பகைமை வளர்க்கும் படத்தைத் திரைய ரங்கில் சென்று பார்த்து அவர்களே இதனை செய்தியாக்கி வெளியிட்டுள்ளது உள்நோக்கம் கொண்ட செயலாகும். பொறுப்புள்ள பதவி வகிக்கும்  ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் இச்செயல் மாநிலத்தில் மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் செயலாகும். மேலும் இந்திய அரசமைப்பு சட்டத்தில் அடிப்படையை தகர்க்கக்கூடியதாகும். விவசாயிகளின் அவலத்தை வெளிப் படுத்தும் கடைசி விவசாயி போன்ற படத்தைப் பார்த்து இதுபோன்று செய்தி வெளியிடாத இவர்கள்  இந்தப்படத்துக்கு மட்டும் அதை விளம் பரப்படுத்துவது  என்பது மேற்படி படம் அது  முன்னெடுக்கும் மதப்பகைமை அரசியலுக்கு ஆதரவு அளிக்கும் செயலாகும். ஆட்சியாளர்க ளின் இத்தகைய  செயலை  மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது.நாட்டின் ஜனநாயக மாண்புகளையும்,நல்லிணக்கத்தையும்  காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்  இன்னும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.