tamilnadu

img

புதிய வரலாறு எழுதும் குதிரை எலும்பும்; இரும்பும்

மதுரை வைகை இலக்கிய திரு விழா மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  இதன் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக அகழாய்வுகள் எழுதும் புதிய  வரலாறு என்ற தலைப்பில் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக அகழாய்வு புதிய கண்டுபிடிப்புகள் இன்றைக்கு இந்தியாவை உலுக்கி கொண்டிருக்கின்றது. கீழடி என்ற சொல் எப்படி நாம் கொண்டாடுகின்ற ஒரு  சொல்லாக உள்ளதோ. அதுபோல இந்தி யாவில் சிலருக்கு அது அச்சுறுத்தும் சொல்லாகவும் பயமுறுத்தும் சொல்லாக வும் உள்ளது.  வரலாறு என்பது கண்டுபிடிப்புகளில் இருந்து எழுதக்கூடிய உண்மை.  உண்மையிலிருந்து கட்டமைக்கப்படு கின்ற ஒரு பார்வை. கீழடி அகழாய்வு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே மதுரை எப்படி தமிழ் மொழியின் அடையாள மாக தமிழ்நாட்டின் பெரும்  அடையாள மாக இருக்கின்றது? 

2600 ஆண்டுகளுக்கு முன் குதிரை...

‘நீர்பெரும்புரவி’ என்று  பட்டினப் பாலையில் ஒரு செய்தி உள்ளது. ‘புரவி’  என்றால் குதிரை. இந்த புரவி அரபு  நாடுகளில் இருந்து கப்பல் வழியாக  தென் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை நீர் பெரும் புரவி என்று இலக்கியத்தில் சொல்லியுள் ளார்கள். அதாவது கப்பல் வழியாக கொண்டுவரப்பட்ட குதிரை தென்னிந்தியா வில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடையாது.  ஆனால், கீழடி அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த குதிரை யின் எலும்பு அகழாய்வில் கிடைத்துள் ளது. அது தென்னிந்தியாவிலேயே கிடைத்த முதல் குதிரை எலும்பு. கீழடிக்கு எப்படி குதிரையின் எலும்பு வந்திருக்கும்? அது அரபு நாட்டில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதால் வந்திருக்கும். இலக்கியத்தின் ஆதாரமும் வரலாற்றின் கண்டுபிடிப்பும் பொருந்து கிற போது தான், அது தன் மீது படிந்துள்ள தூசிகளையும் அழுக்குகளையும் தட்டி எழுப்பிக் கொண்டு மேலே வருகிறது!.

4500 வருடங்களுக்கு முன் இரும்பு...

சமீபத்தில் மயிலாடும்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை தமிழக முதல்வர் அவர்கள் அறிவித் தார். மயிலாடும்பாறையிலே கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கி. மு. 2152வது ஆண்டில் உருவாக்கப்பட்ட இரும்பு என்று அகழாய்வின் முடிவு சொல்கிறது. அப்படி என்றால் இன்றையிலிருந்து 4500 வருடங்களுக்கு முன்பு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 4500 வருடங்களுக்கு முன்பே  இரும்பை கண்டுபிடித்த ஒரு சமூகம்,  தமிழ் சமூகம் இருக்கிறது. வட இந்தியாவில் சிலர் இந்தியாவின் வர லாற்றை தாங்கள் தான் எழுத வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எனவேதான் தொடர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த வாரம் கூட சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு, மத்திய தொல்லியல் துறை சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள் குறித்த இதுவரை மத்திய தொல்லியல் துறை காட்சிப்படுத்தவில்லை என்று அது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில், ஏன் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டு பிடித்த தொல்லியல் பொருட்களை இன்னும் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளேன்.  மத்திய தொல்லியல் துறை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால், கீழடி அகழாய்வு சம்பந்த மாகவே பத்துக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளை யில் தொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு கீழடி அகழாய்வை கைவிட்டபோது, அதை ஒன்றிய அரசு கைவிடக்கூடாது என்று ஒரு வழக்கு, அமர்நாத் ராம கிருஷ்ணன் கீழடி அகழாய்வில் இருந்து மாற்றப்பட்ட போது அதற்கு எதிரான வழக்கு, இப்போது அகழாய்வு முடிவை வெளியிட வேண்டும் என்று வழக்கு. அப்படி என்றால் இவற்றையெல்லாம் தடுக்கின்ற சக்தி அதிகாரத்தில் உள்ளது என்று அர்த்தம்.

எனவேதான் கீழடி சம்பந்தமாக சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில், மக்கள் மன்றத்தில் கடந்த 10 ஆண்டு களாக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது தமிழ் சமூகம். இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு சொந்தமானது. எனவே தான் அதை  மீட்டெடுக்க வேண்டும் என்று கூறுகின் றோம்.  அஸ்தினாபுரத்தில் கூட கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. மகாபாரதம் கதை நடந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் விடாமல் அகழாய்வு நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. ஆனால் கீழடியில் அகழாய்வை நடத்த மறுக்கிறது. இதற்கு பின்னால் இருக்கும் கருத்தியல் அரசியலை உடைத்து எறிய வேண்டிய சூழ்நிலை உள்ளது.  தமிழகத்தில் 12 ஆண்டுகளாக ஆதிச்சநல்லூர், பொருநை, கீழடி, மயிலாடும்பாறை எல்லா அகழாய்வும் ஒன்றுக்கொன்று பொருந்துகிறது. ஒன்றுக்கொன்று இணைப்பு இருக் கின்றது. அந்த இணைப்பை ஆய்வா ளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய இலக்கியச் செல்வம் எழுதப்பட்ட வரலாறு வேறு எங்கும் இல்லை. 

கீழடியில் உள்ள அருங்காட்சி யகத்திற்கு போனால் அங்கு ஆறு அரங்கு கள் உள்ளன. அதில் ஒரு அரங்கத்தில் விளையாட்டு பொருட்களை மட்டும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். ஏனென்றால் வேலை நேரம் போக பொழுதுபோக்கை கொண்ட ஒரு நாகரீக சமூகமாக கீழடி இருந்துள்ளது. அங்கு விளையாட்டுக்கு வைத்திருந்த மணிகள் கீழடியிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சில வகை மணிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அப்படி மணிகளையும் அலங்கார பொருட்களையும் இறக்குமதி செய்கின்ற ஒரு நாகரீக சமூகமாக இருந்துள்ளது தமிழக அகழாய்வு களங்கள் புதிய புதிய செய்திகளை கொடுக்கக்கூடிய களங்களாக உள்ளன. எனவேதான் தமிழ்நாட்டில் தொடர்ந்து அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கான வரலாறு எழுதப்பட வேண்டும். அந்த வரலாறு இந்தியாவின் துணைக் கண்டத்தில் எங்கு பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு புராணக் கதைகளை வைத்து வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள். ஆனால் இலக்கியமும் வரலாறும் பின்னிப்பிணைந்த ஒரு இட மாக தமிழ் நிலம் இருக்கின்றது என்பதை - தமிழக அகழாய்வுகளை மக்கள் மத்தியில் மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வோம்” என்றார்.

மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் - மதுக்கூர் இராமலிங்கம் பேச்சு

மாணவர்கள் இன்றைக்கு அரசிய லுக்கு வரலாமா என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார். அனைத்திலும் அரசியல் இருக்கின்றது. இன்றைக்கும் பலர் தன்னுடைய 60 வயதுக்கு மேல் அரசியலுக்கு வருகின்றார்கள். ஆனால்  மாணவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்வதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டும் அல்லது உத்தியோ கத்திற்கு போக வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கின்றார்கள்.  ஒரு முக்கியமான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது அதில் தேர்தல் பத்திரங்கள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று இவற்றையெல்லாம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். அதில் என்ன அரசியல் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். 1917 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்கு பின் தோழர் லெனின் அவர்கள் சோவியத் யூனியனின் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு உள்ள மாணவர்களை பார்த்து நீங்கள் வானத்தை வரையுங்கள் என்று கூறினார்.  அப்போது ஒவ்வொருவரும் நீலம், மஞ்சள், சிவப்பு என்று வரைந்தார்கள். ஒரே  ஒரு மாணவன் மட்டும் கருமை நிறத்தில் வானத்தை வரைந்து இருந்தான். அப்போது லெனின் ஏன் நிலா இல்லாத நேரத்தில் நீ வானத்தை வரைந்து இருக்கிறாயா என்று கேட்டார். இல்லை, நான் எங்கள் வீட்டில் படுத்து எங்களது வீட்டின் கூரை வழியாக வானத்தை பார்க்கும் போது கருமை நிறமாக தான் இருக்கும். அதைத்தான் வரைந்தேன் என்றான் மாணவன். ஏனென்று லெனின்  கேட்டதற்கு எங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வரும் புகையால் எங்களது பகுதி முழுவதும் இப்படித்தான் இருக்கிறது என்று கூறினார். அப்போது உடனடியாக தன்னுடன் வந்த  அதிகாரியை லெனின் அழைத்து அந்த பகுதிக்கு அனுப்பி அந்த பகுதியை உட னடியாக சரி செய்வதற்கும் அந்த ஆலை யில் வரும் புகையை தடுப்பதற்கும் உத்தர விட்டார் இதுதான் அரசியல் நாம் எதற்கு வந்தோமோ அதை மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதுதான் அரசியல். அரிசி  விலை கூடுவதிலும் அரசியல் இருக்கின்றது. அரிசி இலவசமாக கொடுப்பதிலும் அர சியல் இருக்கின்றது. அந்த அடிப்படையில் மாணவர்கள் அரசியலை படியுங்கள், எழுதுங்கள். கற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.