tamilnadu

img

ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பா?

சேலம் ஜூலை 5- ஊழல் புகாரில் சிக்கிச் சிறை சென்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீடிப்பு செய்த தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு  சென்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, மாநில ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புசெய்துள்ளார்.  இதனைக் கண்டித்தும், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதைத் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று, பெரியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாண வர் சங்க பெரியார் பல்கலைக்கழக கிளைச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது,  மாவட்டச் செய லாளர் பவித்ரன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.  இதில், மாவட்ட துணைச்செய லாளர்கள் டார்வின், கீர்த்திவாசன், துணைத்தலைவர் கோகுல், அபி ராமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் திவ்யா, நவீன் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.