புதுச்சேரி, பிப். 5- புதுச்சேரியில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பள்ளி கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந் தொற்றுகாரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் வகுப்பறையில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பது மாணவர்க ளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரேசன் கடைகள் இன்னும் திறக்கப் படவில்லை. இந்நிலையில் ஒன்றிய அரசு நான்கு மாதங்களுக்கு, சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசி மூட்டைகளை அர சின் பள்ளி கட்டடங்களில் விநியோகம் செய்வ தற்கு அடுக்கி வைக்கப்பட் டுள்ளது. மக்களின் உணவு உரிமையை பறித்து, ரேசன் கடைகளை ஓழித்துக்கட்ட அரசு முடிவெடுத்ததன் விளைவாக அவசர காலத்தில்ரேசன் பொருட்களை பள்ளிகளில் வைக்கப்பட்டன. ஆனால் வாரத்தில் 6 நாட்களும் முழு வேளை நாட்களாக பள்ளி கள் செயல்பட தொடங்கிய போது வகுப்பறைகளை விட்டு ரேசன் பொருட்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது அரசு மற்றும் அரசுத்துறையின் உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா கும்.
எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ. 2.5 கோடி செலவு
3 லட்சம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் ரேசன் கடைக ளுக்கு வாடகை அளிக்க மறுக்கும் புதுச்சேரி அரசு, ஊதாரித்தனமாக ரூ.2.5 கோடிக்கு சட்டமன்ற உறுப்பி னர் ஒவ்வொருவருக்கும் 7.5 லட்சம் செலவில் ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த கைபேசி, மடிக்கணினி போன்ற பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுகாலத்தில் ஏறக்குறைய அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. ஆனால் அரசுக்கோ கல்வித்துறைக்கு, மாண வர்களின் எண்ணிக்கை உயர்த்ததை எண்ணி ஒரு துளிக்கூட மகிழ்ச்சியோ அல்லது கடமை உணர்வோ இருப்பதாக தெரிய வில்லை.
சிபிஎம் எதிர்ப்பு
மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் தளவாட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். கல்வித்துறை மற்றும் அரசின் செயல்பாடு அரசு பள்ளிகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாண வர்களை அலைகழிக்க வைக்கும் செயலினை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பள்ளிகளில் மாண வர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும். மாணவர் நலன் கருதி தேவையான அடிப் படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்வி கற்க தடையாக, வகு ப்பறைகளில் அடுக்கி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளை அப்புறப் படுத்தி சிறந்த கற்றலுக்கான சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளார்.