சென்னை, ஜூன் 9- தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற் பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஓட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கூடைப் பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி,கபடி, துப்பாக்கி சூடுதல் உள்ளிட்ட 32 போட்டிகள் நடத்தப்படு கின்றன. இந்தப் போட்டிகளில் தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகளில் படித்த மாணவர்களில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவர்கள் தேசிய அளவிலானபோட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த போட்டி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆனால், அந்தப் போட்டியில் பங்குபெற வேண்டிய மாணவர்களை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தேர்வுசெய்ய வில்லை. இதனால், சுமார் 4,000 மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழ்நாடு பங்கேற்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியிருந்த நிலையில், லக்னோவி லிருந்து கடந்த மே 11 ஆம் தேதியே 247 மாணவர்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை கீழ் இயங்கும் முதன்மை விளையாட்டு ஆய்வாள ருக்கு சுற்றறிக்கை வந்துள்ளது என்கிறார்கள். ஆனால், அந்த கடிதம் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வில்லை. இதனால்தான் மாணவர்கள் வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது. தேசிய விளையாட்டுப் போட்டி களில் மாணவர்கள் பங்கேற்றிருந்தால் உயர்கல்வி மாணவர் சேர்க்கை யில் 5 மதிப்பெண் கிடைத்திருக்கும். பெறும் பதக்கங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர்வ தற்கு தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதே போன்று, உயர்கல்வி மற்றும் அரசு வேலை பெறுவதற்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது உதவும் என்ற நிலையில் அதிகாரி களின் அலட்சியத்தால் மாணவர்களின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. உடற்கல்விக்கும், விளையாட்டுக் கும் முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் விளையாட்டு துறை அமைச்சரும், பள்ளி கல்வி அமைச்சரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.