சென்னை, மார்ச் 10 - ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் சங்கிலி தொடர் போல் பேரலையாய் எழும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் சூளுரைத்தனர். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை அரசுக்கு, ஆளுநர் திருப்பி அனுப்பி னார். இதனையடுத்து தமிழக அரசு இரண்டாவது முறையாக சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு பிப்.8ந் தேதி அனுப்பி வைத்தது. அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாததால், குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், மசோதா எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆளுநர் மாளிகை தெரிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும்’ என வலியுறுத்தி புதனன்று (மார்ச் 9) சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர்.
வெற்றி பெறுவோம்
இந்தப் போராட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழகத்தில் பெரும்பான் மையானவர்கள் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களிடம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறது. படிப்பது ஒரு பாடம், தேர்வில் கேள்வி கேட்பது ஒரு பாடம் என்றால் எப்படி தேர்ச்சி பெற முடியும். இப்படிப்பட்ட நிலையில், கணிதமேதை ராமானுஜம் தேர்வு எழுதினால் கூட, தேர்ச்சி பெறுவது சிரமம். இதன்காரணமாகவே மாநில பாடத்திட்டத்தில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற அனிதாவால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. எனவேதான், நீட் தேர்வு வேண்டாம் என்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மாண வர்களின் போராட்டம் வெற்றி பெறும்” என்றார்.
13 ஆண்டுகளாக கிடப்பில்..
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “நீட் ஏழை எளிய மக்களின் கல்விக்கு தடை யாக உள்ளதால், அது தமிழகத்தில் அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஆளுநர்கள் தடுத்து வருகின்றனர். சிஐடியு தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த திமுக ஆட்சியில், ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர் எண்ணிக்கையில் 20 விழுக்காட்டிற்குள்தான் பயிற்சி தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்த ஆளுநர் காலதாமதம் செய்து, மசோதாவை குடியரசு தலைவ ருக்கு அனுப்பினார். அதன்பின் 3 குடியரசு தலைவர்கள் மாறிவிட்டனர். சிஐஐ, அசோசெம் போன்ற முதலாளிகள் அமைப்பின் நிர்பந்தத்தால் அந்த சட்ட மசோதா விற்கு ஒப்புதல் தராமல் உள்ளனர். ஆளுநர்கள், ஒன்றிய அரசு, குடியரசு தலைவர்கள் மாநில சட்டமன்றங்க ளுக்கு மதிப்பளிப்பது கடமை. அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்தால் நாடு சீர்குலையும். எனவே, ஒருவ ரோடு ஒருவர் இணைந்து போராடு வோம். மாணவர்களின் போராட் டத்திற்கு தொழிலாளி வர்க்கம் ஆதரவாகஇருக்கும்” என்றார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவா`ஹிருல்லா சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக தேர்தல் குழுச் செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மாணவர்களின் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். சவீதா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் எல்.ஜவகர் நேசன், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) ஆ.செல்வம் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), என்.ரெஜீஸ்குமார் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்), எஸ்.வாலண்டினா (அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம்), எம்.ராமகிருஷ்ணன் (தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு), துளசிநாராயணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), க.உதயகுமார் (தமிழக மக்கள் ஒற்றுமை மேடை), கே.சாமுவேல்ராஜ் (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி), எஸ்.ராஜேந்திரன் (தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு), அமீர் (தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம்), ச.மயில் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), பேரா.காந்திராஜன் (பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்), சிவராமன் (தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம்), மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.
ஜி.ராமகிருஷ்ணன்
மாணவர்களின் 48 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தை வியாழனன்று (மார்ச் 10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் நிறைவு செய்து உரை யாற்றினார்.