சென்னை,பிப்.11- மாநிலம் முழுவதும் 6,7,8 ஆம் வகுப்புகள் படிக்கும் 1 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் வருகிற 26 ஆம் தேதி புத்தகமில்லாமல் வகுப்புகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி கள் அனைத்தும் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் மட்டுமே பயின்று வந்த மாணவர்களை மீண்டும் உற்சாக மாக கல்வி பயில பள்ளி கல்வி துறை முயற்சி மேற் கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 6,7,8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரின் கற்றல் திறனை வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி கல்வி துறை சார்பில் வருகிற 26 ஆம் தேதி புத்தகமில்லா தினம் கொண்டாடப்படு கிறது. இதற்கான ஏற்பாடு களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரி யர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. புத்தகமில்லா தினத்தன்று மாண வர்களின் தனித்திறமைகளை கண்ட றியும் போட்டிகள் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும், பாரம்பரிய கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விளையாட்டுகளை நடத்தவும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உள்ளனர். இது தவிர சாதனை படைத்த பெண்கள், சிறுவர், சிறுமிகள் குறித்த தகவல்களை திரட்டி அதனை மாணவ, மாணவிகளுக்கு குறும்படமாக காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ரூ. 1 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் இடை நிலை கல்வி பயிலும் மாணவர்களின் திற மையை வளர்க்க முடியும் என்றும் பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. போட்டிகளையும், புத்தகமில்லா தினத்தையும் கொண்டாட ஆசிரியர்க ளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவு றுத்தி உள்ளனர்.