திருவாரூர், ஜன.12 - கேரள மாநிலம் இடுக்கில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க கிளை உறுப்பினர் தீரஜ், காங்கிரசாரால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலை கண்டித்தும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து ஒரு மாதமாக போராட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகி கள் மீது பல்கலைக்கழகம் பழி வாங்கும் வித மாக அவர்களை இடைநீக்கம் செய்தது. மேலும் அவர்களின் மீது அபராதம் விதித் துள்ளதை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் புதன்கிழமை மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் வீ.சந்தோஷ், மாவட்ட துணை செயலாளர் ப.சுர்ஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.முருகன். மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.ஜெயந்தி, தரணி ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாண வர் சங்க கும்பகோணம் நகரச் செயலாளர் ஆகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அர்ஜுன், மாவட்ட குழு உறுப்பினர் சந்துரு, மாநிலச் செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.