புதுதில்லி, ஆக.8- உயர் கல்வி நிறுவனங்களில் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது ஒவ்வொரு ஆண்டும் அதி கரித்துக் கொண்டிருக்கிறது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்திருப்பதி லிருந்து தெரிய வருகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக் கழ கங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை, இந்தி யன் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் (IISER) முதலான நிறுவனங்களில் தலித், பழங்குடி யின மாணவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொள்வது ஆண்டுக்காண்டு அதிகரித்து வரு கிறதா என்றும், ஆம் எனில் அவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதி லளித்து ஒன்றிய கல்வித்துறை இணை யமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக் கையை ஆராய்வோமானால் 2018இல் 21 பேரும், 2019இல் 20 பேரும், 2020இல் 13 பேரும், 2021இல் 10 பேரும் 2022இல் 27பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். மாணவர்களிடையே தற்கொலை மனப்பான்மையை கண்டறியவும், துன்புறுத்தல்களை தவிர்க்கவும், மாணவர்களின் மனநலத்திற்காகவும், அவ்வப்பொழுது ஆலோசனை வழங்க ஆலோசகர்கள்/உளவிய லாளர்கள்/மருத்துவர்கள் ஆகி யோரை நியமித்து செயலூட்ட நல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்திட அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரு கிறது என்று அமைச்சர் கூறினார். (ந.நி.)