வெம்பக்கோட்டை, ஜன.8- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே அன்னபூரணியா புரத்தில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என பொதுமக்கள் ஆறுமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக் காமல், மதுபானக் கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால், வெகுண்டெழுந்த பொதமக்கள் மது பான கூடத்தை அடித்து நொறுக்கி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்டது அன்னபூரணியாபுரம் கிராமம். இங்கு கோவில்கள், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் ஐ.டி.ஐ மற்றும் குடி யிருப்பு அருகே தனியார் மதுபானக் கூடம் கட்டப்பட்டு வந்தது. எனவே, மதுபானக்கூடம் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத் தால் இளைஞர்களின் வாழ்வு சீர ழிவதோடு, சட்டம், ஒழுங்கு பிரச்சனை மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆறுமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. மாறாக, தனியார் மது பானக் கூடத்திற்கு ஆதரவாக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அங்கு மதுபான கூடம் அமைக்க அனுமதி வழங்கியோ டு, உடனடியாக மதுபானக் கூடம் திறக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி பொது மக்கள் ஜனவரி 3ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்பு, தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போ வதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பொது மக்கள் தனியார் மதுபானக் கூடத்திற்குள் நுழைந்தனர். பின்பு, உள்ளே இருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த னர். பின்பு, மதுபான கூடத்தை நிரந்தர மாக மூடக்கோரி மண்ணெண்ணெய் கேன்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமா தானப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். முடிவில், மதுபான கூடத்தை வரு வாய்த்துறையினர் சீல் வைத்தனர். அதேநேரத்தில், தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கியதாக கிராம மக்கள் 50 பேர் மீது வெம்பக் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நகர் புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் தனியார் மதுபானக் கூடங்களுக்கு அதிக அளவில் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இவை ரெக்ரேசன் கிளப், ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன. இதன் உரிமையாளர்களாக முக்கியக் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறி ஞர்கள் உள்ளனர். அரசு மதுபானக் கடைகள் உரிய நேரத்தில் மூடப்படும். ஆனால், இதுபோன்ற தனியார் மது பானக் கூடங்களில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதை காவல்துறையினரும் கண்டுகொள்வதில்லை. எனவே, தமிழக அரசானது, தனியார் மதுபானக் கூடங்கள் அனைத் தையும் மூட உத்தரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.