திருவள்ளூர், ஜூன் 21- அன்னிய நாட்டு நிறுவனம் மலட்டுத்தன்மை உள்ள நெல் விதை களை விற்றதால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் வேளாண் துறை அலு வலகத்தை முற்றுகையிட்டனர். சோழவரம் அருகில் உள்ள பெரியமுல்லைவாயல், புதுப்பாக்கம், கும்மனூர், மாபுஸ்கான்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்ய அரு மந்தை பஜாரில் உள்ள அன்னிய நாட்டை சேர்ந்த ஹரி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து நெல் விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.85 கொடுத்து வாங்கியுள்ளனர். பின்னர் முறையாக நிலத்தை உழுது, உரமிட்டு, நீர்பாய்ச்சி பயிரிட்டு வந்தனர். நான்கு மாதங்கள் ஆகியும், நெல் பயிர்கள் வளராமல் இருந்ததை கண்டு விவ சாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மலட்டு விதை களை விற்ற தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 40ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரியும் செவ்வாயன்று (ஜூன் 21) தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் விவ சாயிகள் சோழவரத்தில் உள்ள வேளாண் துறை ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் தலைவர்களை அழைத்து பேசினர். இதற்கிடையே அந்நிய நாட்டு மலட்டு நெல் விதைகளை விற்ற ஹரி ட்ரேடர்ஸ் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததால் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. காலை யில் துவங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இந்த போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலை வருமான ஜி.வி.எல்லைய்யன் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் பி.துளசிநாராயணன், மற்றும் மாவட்ட தலைவர்கள் கருணாநிதி, எம்.வி.நக்கீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.