திருப்பூர், ஜன.9- விசைத்தறி துணி நெசவு கூலி உயர்வு ஏழு ஆண்டு காலமாக உயர்த்தப் படாததைக் கண்டித்தும் கூலி உயர்வு வழங்கக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9 ஞாயிறன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ள னர். இவர்களிடம் 2 லட்சம் விசைத் தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறை முகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு, நூல் வாங்கி அதனை நெசவு கூலி அடிப் படையில் காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை யாக உள்ளது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் தினசரி 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படு கிறது. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதனடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் நிறை வேற்றி அதன்படி கூலி வழங்கப்படும். ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றியும், அந்த கூலி உயர்வு வழங்குவதற்கு ஜவுளி வியாபாரிகள் மறுத்துவிட்டனர். விசைத்தறியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக் கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை. வெகுவாக உயர்ந்து விட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பல பேர் வேறு வழிகளைத் தேடி போய் விட்டனர். பலர் தங்கள் விசைத்தறிகளை பழைய இரும்பு சாமான்களாக விற்று விட்டனர். இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்து வாடியும் விசைத்தறியாளர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 24.11.2021 ஆம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசி, பல்லடம் ரகத்திற்கு 20 சதவிகிதம், சோம னூர் ரகத்திற்கு 23 சதவிகிதம் என கூலி உயர்வு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அரசு அறிவித்த கூலி உயர்வையும் வழங்காமல் ஜவுளி வியாபாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து ஞாயிறன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் அறிவித்தனர். இதன்படி திருப்பூர், கோவை மாவட்டங் களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு ள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 60 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி முடங்கியுள்ளது. ஏறத்தாழ இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அரசு தலையிட சிஐடியு கோரிக்கை
இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்துசாமி கூறுகையில், நெசவு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். சாதாரணமாக இன்று ஒரு நாள் மட்டும் விசைத்தறி இயங்காததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலை தொடருமானால் விசைத்தறி உரிமை யாளர் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடி யாக தலையிட்டு விசைத்தறி துணி வியாபாரி களை நெசவு கூலி உயர்வு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.