tamilnadu

img

மக்களவைத் தேர்தலில் யூடியூப் புரட்சி: இணைய ஊடகங்களின் வலுவான ஈடுபாடு

புதுதில்லி, ஜுன் 8 - தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இந்தி பேசும் மக்களின் இதயத்தில் மோடிக்கும் பாஜகவுக்கும் மகத்தான வெற்றி கிடைக்கும் என்று ஊடகங்கள் கணித்தபோது, பாஜகவின் கார்ப்ப ரேட் சார்பு கொள்கைகளின் செல்வாக் கற்ற தன்மையை அம்பலப்படுத்தத் தயாராக இருந்த இணைய ஊடகத் தொழிலாளர்கள் குழு இந்தியாவில் உள்ளது. நியூஸ் க்ளிக் என்ற ஆன் லைன் மீடியா மூலமாகவும், துருவ் ரதி, ரவீஷ் குமார் மற்றும் ஆல்ட் மீடி யாவின் முகமது ஜுபைர் போன்ற  யூடியூபர்களின் அச்சமின்மையா லும் மோடியின் அதீத போக்குகளை மக்கள் அடையாளம் காண முடிந்தது. இந்த ஊடகத் தலையீட்டின் பலத்தில் தான் மகாராஷ்டிரா, உ.பி., ராஜஸ்தா னில் இந்தியா இயக்கம் முன்னே றியது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும், வர லாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தின் போதும் நியூஸ் க்ளிக்  தயாரித்த காணொலிகளும், ஆசிரி யர்களான பிரபீர் புர்கயஸ்தா, ஊர்மி லேஷ், அபிசார் ஷர்மா உள்ளிட்டோர் நடத்திய விவாதங்களும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தின. இந்த வீடியோவை இந்தி வட்டாரத்தில் கோ டிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அவை பல்வேறு இடங்களில் பொது மக்கள் மத்தியிலும் காட்சிப்படுத் தப்பட்டன. இதற்கு பழிவாங்கும் விதமாக, நியூஸ் கிளிக் அலுவலகங்களில் பல்வேறு கட்ட சோதனை நடத்தப்பட்டு,  ஆசிரியர்களின் லேப்டாப், செல்பேசி கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறு தியில் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றதாக பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் பிரபீர் அடைக்கப்பட்டார். தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்த மே 15-ஆம் தேதி கைது செய்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த துடன் பிரபீரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. துருவ் ரதி மற்றும் என்டிடிவியின் முன்னாள் தொகுப்பாளர் ரவீஷ் குமார் ஆகியோர் பாஜக கொள்கைக ளின் வெற்றுத்தனத்தை அம்பலப் படுத்தும் வகையில் தயாரித்த வீடி யோக்கள் கோடிக்கணக்கான மக்க ளால் பார்க்கப்பட்டுள்ளன. கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு 400க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்புகளின் பொருளற்ற தன்மையையும், அறிவியலற்ற தன்மையையும் ரவீஷ் குமாரால் வெளிப்படுத்த முடிந்தது. மோடியை மீட்பராகவும் வளர்ச்சி நாயகனாகவும் சித்தரித்து அவரை பிரதமராக்குவதில் வெற்றி பெற்ற இந்தி பாஜக சைபர் படையை அவர்க ளால் எதிர்கொள்ள முடிந்தது. புண்ய பிரசூன் வாஜ்பாய், ஆகாஷ் பானர்ஜி, வாலி ரஹ்மானி, குமார் ஷியாம் உள்ளிட்ட பிறரும் இந்த வகையில் பங்களிப்பு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்தி யப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவைத் தேர்தலிலும் பாஜக பெரும் அலையை மீண்டும் ஏற்படுத்தும் என்ற வாதத்தை பாஜக சார்பு கார்ப்பரேட் ஊடகங்கள் வலுப் படுத்தின. அதற்கு இணையான வாதங்களை முன்வைத்து அந்த ஊட கங்களின் கதைகள் அம்பலப் படுத்தப்பட்டன.