tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 20 ஆயிரம் பேர் கைது

சென்னை, டிச. 14 - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி செவ்வாயன்று (டிச.14) தமிழகம் முழுவதும் நடந்த மறியல் போராட்டங்களில் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சென்னை, டிச. 14 - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி செவ்வாயன்று (டிச.14) தமிழகம் முழுவதும் நடந்த மறியல் போராட்டங்களில் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவிதொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அண்டை மாநிலங்களான தெலங்கானாவில் 3,016 ரூபாயும், ஆந்திராவில் 3000 ரூபாயும், புதுச்சேரியில் 3,800 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட ஒப்பீட்டளவில் இந்த மாநிலங்களில் கூடுதல் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, கடந்த 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள உதவித்தொகை குறைந்தபட்சம் 3000 ரூபாயாகவும், கடும் ஊனமுற்றோருக்கு 5000 ரூபாயாகவும் வழங்க கோரி 120 மையங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளை கைது செய்த காவல்துறையினர், உரிய வாகன ஏற்பாடு இன்றி சாதாரண வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சிராணியும், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜனும் தலைமை தாங்கினர். தருமபுரி பென்னாகரத்தில் மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தியும், கரூர் கிருஷணராயபுரத்தில் மாநிலச் செயலாளர் பி.ஜீவாவும், சென்னை எழும்பூரில் மாநிலச் செயலாளர் டி.வில்சனும், பழனியில் எஸ்.பகத்சிங்கும், செங்கல்பட்டு திருக்கழுகுன்றத்தில் துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணாவும், ஊத்தங்கரையில் பி. திருப்பதியும், சென்னை கிண்டியில் என்.சாந்தியு, மதுரை பேரையூரில் முத்து காந்தாரியும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. தீவிரமான போராட்டம் மறியல் போராட்டத்தில பங்கேற்று, கைது செய்யப்பட்டவர்களுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சி ராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். “மாற்றுத் திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலும் தீவிரமான போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகளை அரசு தள்ள வேண்டாம்” என் வலியுறுத்தி உள்ளனர்.