tamilnadu

img

சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர், ஜுன் 2-  தமிழ்நாட்டின் சிறப்பான அந் தஸ்தை பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார். இந்த நூல கத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது,  “தமிழகத்தின் கலாச்சாரத்தை இது போன்ற நூலகங்களில் கிடைக்கக் கூடிய ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழகத்தின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூல கத்தில் மழை நீர் கசிவுகள் இருக்கக் கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக்  கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருட் களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படு கிறது. இதற்கு தேவையான நிதி, கருத்துருக்களை மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும் தேவை கள் இருப்பதாக ஆட்சியர் தெரிவித்த தையும் அறிக்கையாகப் பெற்றுள் ளோம். இவை தமிழக முதல்வரின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த நூலகத்தில் மாநில அரசு ஒரு தொகையும், ஒன்றிய அரசு  ஒரு  தொகையும் ஒதுக்கீடு செய்கிறது.  ஆனால், ஒன்றிய அரசு நிதி ஒதுக் கீட்டை அவ்வப்போது நிறுத்தியிருந்தா லும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதி யம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை.  இந்த நூலகத்தில் தற்போது போது மான பணியாளர்கள் உள்ளனர். இன்னும் கூடுதல் பணியாளர்களை நிய மிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம். கட்டாயக் கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யா விட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறும்” இவ்வாறு அவர் தெரி வித்தார்.  அப்போது, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ். மார்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.