states

img

புரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலி

புரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா புரி ஜெகன்நாதர் கோவில் ரதயாத்திரை நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு.

இந்நிலையில், இந்த ஆண்டு ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறும்.

இந்நிலையில், இன்று காலை 4 மணிக்கு தேர் குண்டிச்சா கோவில் அருகில் வந்த போது, அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். தேரை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தபோது, மரக்கம்புகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரி கூட்டத்திற்கு வந்தது.

லாரி தேர் அருகில் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் முண்டியடித்து ஓடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் முச்சுத்திணறி உயிரிழந்தனர்.மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒடிசா பாஜக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில், புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.