tamilnadu

img

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட சிஐடியு வலியுறுத்தல்

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட சிஐடியு வலியுறுத்தல்

நாமக்கல், ஜூன் 29- காலாவதியான சுங்கச்சாவடி களை இழுத்து மூட வேண்டும், சிஐ டியு மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க  (சிஐடியு) மகாசபை, எலச்சிபாளை யம் சமுதாய நலக்கூடத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆனந்தன்  தலைமை வகித்தார். துணைச்செய லாளர் முனியப்பன் வரவேற்றார். துணைத்தலைவர் ஆனந்தராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  சிஐடியு மாவட்டத் தலைவர் ந. வேலுசாமி துவக்கவுரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் சு. சுரேஷ் அறிக்கையை முன்வைத் தார். சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.அசோகன். பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச்  செயலாளர் தமிழ்மணி, கட்டு மானத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சிவராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பொன்னுசாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ரமேஷ், கிட்டு சாமி, ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், ஜூலை 9 ஆம்  தேதி நடைபெறவுள்ள நாடு தழு விய பொது வேலை நிறுத்தத்தில், மோட்டார் தொழில்களில் ஈடுபடும்  தொழிலாளர்கள் அனைவரும் பங் கேற்பது என முடிவெடுக்கப்பட் டது. மேலும், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும் பப்பெற வேண்டும். மோட்டார் வாகனம் இயக்கும் ஓட்டுநர்கள் மீது  விதிமீறல் என்ற பெயரால் கடும்  அபராதத்தை விதிப்பதை கைவிட  வேண்டும். ஆன்லைன் மூலம் அப ராதம் விதிப்பதை கைவிட வேண் டும். தொழிலாளர் நலவாரியத்தி லுள்ள ஓட்டுநர்களுக்கு இலவச மாக வீடுகள் கட்டித்தர வேண்டும். எப்சி, இன்சூரன்ஸ் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் உயர்த் தியதை குறைக்க வேண்டும்.  காலாவதியான சுங்கச்சாவடிகளை  இழுத்து மூட வேண்டும். சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்து வதை கைவிட வேண்டும். சொந்த மாக கார் வைத்திருப்பவர்கள் வாடகை அனுமதி பெறாமல் வாடகைக்கு வாகனங்கள் இயக்கு வதை தடை செய்ய வேண்டும். டெம்போ, கார் ஓட்டுநர்களுக்கு அந்தந்த பகுதியிலே ஓய்வறைகள் அமைத்துத்தர வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  நாமக்கல் மாவட்டத் தலைவராக  எம்.ஆனந்தன், செயலாளராக  சுரேஷ், பொருளாளராக சக்தி வேல், துணைத்தலைவர்களாக ஆனந்தராஜ், வரதராஜ், பாண்டி யன், துணைச்செயலாளர்களாக முனியப்பன், மாதேஸ்வரன், கந்த சாமி உட்பட 19 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், கிளைத் தலைவர் ஆர்.சேகர் நன்றி கூறினார்.