states

img

இமாச்சலில் 17 பேர் பலி; உத்தரகண்டில் 9 பேர் மாயம்

இமாச்சலில் 17 பேர் பலி; உத்தரகண்டில் 9 பேர் மாயம்

மேகவெடிப்பு

இமயமலைச்சாரலில் உள்ள இமாச்  சலப் பிரதேச மாநிலம் தென்  மேற்கு பருவமழை காலத்தில் அதீத அளவில் கனமழையை எதிர்  கொள்ளும். சில நேரங்களில் மேக வெடிப்பும் ஏற்படுவது வாடிக்கையான விஷயம் என்ற நிலையில், கடந்த வாரம்  இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக  பலத்த மழை பெய்தது. இந்த கனமழை  காரணமாக பியாஸ் நதியில் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்,  தரம்சாலா நீர் மின் திட்டத்தில் ஈடுபட்டி ருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இது வரை 17 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. உத்தரகண்ட் இமயமலைச்சாரலில் உள்ள மற்றொரு மாநிலமான உத்தரகண்டின் உத்தரகாசியில் உள்ள பர்கோட் பகுதி யில் ஞாயிறன்று மேக வெடிப்பு ஏற் பட்டது. இந்த சம்பவத்தின்போது சாலை  கட்டுமானத் தொழிலாளர்கள் 9 பேர் மாய மானதாக பேரிடர் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. மேகவெடிப்பு கன மழை குறைந்த பின்பே மீட்பு பணி  தொடங்கும் என செய்திகள் வெளியாகி யுள்ளன.