திருவாரூர், ஜூலை 19 - தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் 7-வது மாநில மாநாடு திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை சம் மேளன தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கீழ்வே ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி துவக்கவுரையாற்றினார். தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் எம்.சௌந்தரராஜன், இரா.மாலதி, எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் நிறை வுரையாற்றினார். இம்மாநாட்டில், கூட்டுறவு நிறுவனங்களில் 480 நாட்கள் பணி புரிந்த ஊழியர்களை நிபந்தனையின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்துப் பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும். நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் அன்றாட நிர்வாகத்தில் அரசு தலை யீட்டை தவிர்த்திட வேண்டும். கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சம்மேளனத்தின் புதிய தலைவ ராக ஆ.கிருஷ்ணமூர்த்தி, செயல் தலைவராக ஆர்.லெனின், பொதுச் செயலாளராக என்.ஆர்.ஆர்.ஜீவா னந்தம், பொருளாளராக சிட்டிபாபு மற்றும் 3 துணை பொதுச் செயலாளர் கள், 10 துணைத் தலைவர்கள், 10 இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட 62 மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாநாட்டில் கூட்டுறவு ஊழி யர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ள கோரி க்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.