tamilnadu

பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு தீவிரம்

சென்னை, டிச. 30- தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவை களை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 1,230  ரூபாய் கோடி மதிப்பில் 12,525 கிராமங்களி லும் இணைய வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்திற்கு கண்ணாடி இழை கேபிள்கள் மொத்தமாக 15 விழுக்காடு நிலத்திற்கு அடியி லும், 85 விழுக்காடு வான் வழியிலும் மொத்த மாக 49,500 கி.மீ. அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோச கர்களை தேர்ந்தெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசின் அனைத்து இணைய சேவை கள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகளை தங்கள் கிராமத்திலேயே பொதுமக்கள் பெறலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்த அறிவிப்பை டான்ஃபிநெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை போர்க் கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது  திட்டத்தை செயல்படுத்த ஆலோசகர்களை நியமிக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.