tamilnadu

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தூத்துக்குடி,பிப். 8- கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தலை நடத்து வதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக,  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள  வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளை யும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல் நிலை பேரூ ராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்  தலைவருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.