சென்னை, ஜன.27- தமிழகத்தில் இளநிலை மருத் துவப் படிப்புகளான எம்.பி.பிஎஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 27 அன்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தமுள்ள 6,990 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந் தாய்வு தொடங்கியுள்ளது. சென்னை அரசு ஓமந்தூரார் பன் னோக்கு மருத்துவமனை வளாகத் தில் சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வு நடைபெற்று வருகிறது. இந் தச் சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந் தைகள் மற்றும் விளையாட்டுப் பிரிவினர் பங்கு பெற்றுள்ளனர்.