சென்னை,மார்ச் 4- தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் மைசூப்பா உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். கடந்த 2 வருடமாக ‘ஆவின்’ பொருட்கள் விலை உயராமல் இருந்து வந்தது இந்த நிலையில் பால் தவிர்த்து மற்ற ஒவ்வொரு பொருட்களின் விலையும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தயிர் ஒரு லிட்டர் ரூ.27-லிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் பாக்கெட் (சாதா) ரூ.14-லிருந்து ரூ.15 ஆகவும், சிறப்பு தயிர் 200 கிராம் பாக்கெட் ரூ.22-லி ருந்து ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. நெய் 1 லிட்டர் ரூ.515-லிருந்து ரூ.535, ஒரு லிட்டர் நெய் ரூ.265-லிருந்து ரூ.275 ஆகவும் 200 மில்லி நெய் ரூ.115-லி ருந்து ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 100 மில்லி நெய் விலை ரூ. 65-க்கு அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நெய் 5 லிட்டர் ரூ.2550-லிருந்து ரூ.2650-க்கு விலை உயர்ந்துள்து. நெய் 15 கிலோ டின் ரூ.8350-லிருந்து ரூ.8680ஆக விலை உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் டின் ரூ.555-லிருந்து ரூ.585, பரீமியம் நெய் ஒரு லிட்டர் ரூ. 305-லி ருந்து ரூ.320ஆக உயர்த்தப்பட்டுள்து. பால் பவுடர் 1 கிலோ ரூ.320 இருந்து ரு.360 ஆக உயர்ந்து உள்ளது. பாதாம் பால் பவுடர் 200 கிராம் ரூ.80-ல் இருந்து ரூ100 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. குல்பி ஐஸ் 25 ரூபாயில் இருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. கோன் ஐஸ் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் அறிவித்துள்ளார்.