tamilnadu

img

மொழி, கலாச்சாரத்தை காப்பதில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர்

சென்னை, ஏப்.23- மொழி, கலாச்சாரத்தை பாதுகாப்ப தில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். சென்னையில் ஏப்ரல் 23 சனிக்கிழமை யன்று நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டி டத் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார். பின்னர் உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசியதாவது: நாட்டின் கலாச்சார தலைநகரங்களில் ஒன்று சென்னை .நான் சிறுவனாக சென்னை வந்த போது, தமிழகத்தில் மொழிப் போராட்டம் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. மொழி, கலாச்சா ரத்தை காப்பாற்றுவதில் தமிழர்கள் முன்னி லையில் உள்ளனர். நீதித்துறையை வலுப்  படுத்துவதில் சென்னை வழக்கறிஞர் களின் பங்கு முக்கியமானது. நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என  மக்கள் நம்புகின்றனர்.

அதனை நீதித்துறை பூர்த்தி செய்யும். வேகமான இந்த உலகில் மற்றவை போல நீதியையும் வேகமாக எதிர்பார்க்கி றார்கள்.நீதியை வேகமாக எதிர்பார்த் தால் உண்மையான நீதிக்கு பாதிப்பு ஏற்படும். அரசியல் சாசன கடமையை நிறை வேற்றுவது என்பது சுமையான பணியா கும். அதை சிறப்பாக செய்து வருகி றோம். ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. தமிழக நீதித்துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.தமிழ்நாடு முதல்வர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்னிடம் கூறினார்.தமிழ்நாடு வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் உழைத்  துக் கொண்டிருக்கிறார்.நீதித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்னு ரிமை அளித்து வருகிறேன். வழக்காடும் மொழி விவகாரத்தில் சில தடைகள் இருந் தாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணப்படும். நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்ட எவை யும் தடையாக இருக்கக் கூடாது. உச்சநீதி மன்ற கிளை துவங்குவதை பொறுத்தவரை சக நீதிபதிகளுடன் கலந்து பேசி காணொ லிக் காட்சியின் மூலமாக வழக்குகள் விசா ரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.