அடிஸ் அபாபா, பிப்.7- தற்காலிமாக ரத்து செய்யப்பட்ட இஸ்ரேலின் பார்வையாளர் அந்தஸ்தை மீண்டும் தருவதா அல்லது வேண்டாமா என்பதை ஒரு குழு பரிசீலிக்கும் என்று ஆப்பிரிக்க யூனியன் முடிவு செய்துள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க யூனியனின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த யூனியனின் பார்வையாளராக இஸ்ரேல் இருந்து வந்தது. பாலஸ் தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத செயல்க ளுக்காக அந்த பார்வையாளர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை மீண்டும் தர வேண்டும் என்று சில ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் கோரி வந்ததால், தற்போது நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் அது பற்றிய விவாதம் எழுந்தது. இந்நிலையில் அந்த விவாதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது.
மாநாட்டின் நிறைவு நாளில் இஸ்ரேலின் பார்வையாளர் அந்தஸ்தைத் திரும்பவும் தருவது பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்படும். அந்தக் குழுவின் ஆய்வறிக்கை கிடைத்தபின்பு முடிவு எடுப்போம் என்று உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஒரு தூதரக அதிகாரி செய்தியா ளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தக்குழுவில் ஆறு நாடுகள் இடம் பெறும். இஸ்ரேல் மீண்டும் அந்தஸ்தைப் பெறுவதை எதிர்க்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் அல்ஜீரியாவும், ஆதரிக்கும் ருவாண்டா மற்றும் காங்கோ குடியரசும் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றன. இந்த நான்கு நாடு களைத் தாண்டி கேமரூன் மற்றும் நைஜீரியா ஆகியவையும் உறுப்பு நாடுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு மீண்டும் பார்வையாளர் அந்தஸ்து ஒருபோதும் தரக்கூடாது என்று பாலஸ்தீனம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பறிக்கும் இஸ்ரேலை அதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று பிரிட்ட னின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கோரி யுள்ளார். உலகத் தலைவர்கள் மற்றும் அரசுகளுக்கு அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அவருடைய இந்தக் கோரிக்கைக்கு பல பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.