41 பேர் பலியான துயர நிகழ்வு கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை துவக்கியது
கரூர், அக்.5 - கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத் தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசா ரணைக்காக அமைக்கப்பட்ட அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தலைமை யிலான சிறப்பு புலனாய்வுக் குழு ஞாயிறன்று (அக்.5) விசார ணையைத் தொடங்கியது. சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் 45 நிமிடங்கள் சிறப்பு புலனா ய்வுக் குழுவினர் விசாரணை மேற் கொண்டனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த ஐ ஜி அஸ்ரா கார்க், “நீதிமன்ற உத்தரவுப்படி முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. இந்தக் குழுவில் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு எஸ்பிக்கள், 5 ஆய்வாளர்கள் உள்ளனர். விசாரணையை இப்போதுதான் தொடங்கினோம் என்பதால் வேறு விவரங்கள் ஏதும் தெரிவிக்க இயலாது.” என்றார். முதற்கட்டமாக கரூர் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் தனிப் படை காவலர் மோகன் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் தெரிவித்தனர். பின்னர், முதல்கட்ட விசாரணையை முடித்து விட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் புறப்பட்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச் சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அன்றைய தினம் இரவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த வர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை அறிவித்துச் சென்றார். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை மையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி யில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பங்களைச் சந்தித்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக கரூர் நகர போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செய லாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், மற்றொரு நிர் வாகி பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பொதுச்செய லாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.அந்த குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது.
