வருமான விவரம் சோனி நிறுவனம் தாக்கல் செய்தது!
சென்னை: இளைய ராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை ‘சீல்’ வைத்த கவரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்பு ரிமை தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஒத்தி வைத்து உள்ளது.