tamilnadu

இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளை கண்காணிக்க மெட்டா திட்டம்?

இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளை கண்காணிக்க மெட்டா திட்டம்?

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் முகநூலின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு சொந்தமானது ஆகும். இது பள்ளி மாண வர்கள், கல்லூரி இளைஞர்கள் என இளசு களின் முக்கிய பயன்பாட்டு தளமாக உள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளை கண்காணிக்க திட்ட மிடுவது போல எண்ட்-டூ-எண்ட் என்க்ரி ப்ஷன் (End-to-End Encryption) வச தியை மே 8ஆம் தேதி முதல் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  ரீதியிலான சீண்டல்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் இணையதளங்களில் அதிக ரித்து வருவதால், அதனைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மெட்டா விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆனால் இந்த அம்சம் நீக்கப்படு வதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை (குறுஞ்செய்தி) மெட்டா நிறுவனத்தால் இனி கண்கா ணிக்கவோ அல்லது படிக்கவோ முடியும். இதுவரை பயனர்களின் தகவல்கள் பாது காக்கப்பட்ட நிலையில், இந்த புதிய மாற்றத்தால் ‘பிரவேசி (Privacy - தனி மனிதத் தனியுரிமை)’ இருக்காது என்ற கவலை சமூக வலைதளப் பயனர்களி டையே எழுந்துள்ளது.