tamilnadu

img

கர்நாடக சைவ மடங்களில் ரம்ஜான் கொண்டாட்டம்

கதக், மே 4- கர்நாடக மாநில சைவ மடங்க ளில் ரம்ஜான் மற்றும் பசவண்ணர் ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒரு சேரக் கொண்டாடப்பட்டு உள்ளது.  அத்துடன் இந்துக்களும் முஸ்லிம்  களும் இணைந்து ஒற்றுமை ஊர்வ லம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். சங்-பரிவார் அமைப்புகளால், சமீபகாலமாக அதிகமான இஸ்லா மிய வெறுப்பு தூண்டப்பட்ட மாநிலம் கர்நாடகம். இங்குள்ள கல்வி நிறு வனங்களில் முஸ்லிம் மாணவியர், ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதிக்கப்பட்டது. கோவில் திரு விழாக்களில் முஸ்லிம்கள் கடை போட அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சியை இந்துக்கள் வாங்கக் கூடாது. இஸ்லாமிய வியாபாரிகளிடம் பழங்களும் கூட வாங்கக் கூடாது, இஸ்லாமியர்களின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சங்-பரிவாரங்கள் மிகத் தீவிர மான வெறுப்புப் பிரச்சாரத்தை கை யில் எடுத்தனர்.

 தார்வாரில் அனுமன் கோவில் முன்பு முஸ்லிம் வியாபாரி நடத்திய கடை இந்துத்துவா கும்பலால் சூறையாடப்பட்டது. மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.  மக்களைத் துண்டாடும் இவ்வ ளவு பிரச்சனைகளுக்கும் இடை யில்தான், கதக் மாவட்டம் கஜேந்திர கடாவில் உள்ள மைசூரு மடத்தின் மடாதிபதி விஜய மஹாந்தேஷ்வர் சுவாமி, மவுலானாவுடன் சேர்ந்து ரம்ஜான் மற்றும் பசவண்ணர் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி யுள்ளார். அதன்பிறகு நகரின் முக்கிய வீதிகளில் இந்து - இஸ்லாமியர் களின் ஒற்றுமை ஊர்வலத்தையும் நடத்தியுள்ளார். “மதம் என்றுமே பெரிது கிடை யாது; சாதியைக் காட்டிலும் கருணை யே சிறந்தது; மனிதனாக பிறந்த அனைவரும் ஒற்றுமையுடன் வாழ  வேண்டும்” என்று இந்த ஊர்வலத் தில் முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். விழாவையொட்டி, விஜய மஹாந்தேஸ்வர சுவாமி உரையாற்றி யுள்ளார். அப்போது, “உலகில் அமைதி நிலவ வேண்டும். அனைவரும் அமை தியாக செயல்பட வேண்டும். அர சியல் தலைவர்கள் உணர்ச்சிப்பூர்வ மாக செயல்படக்கூடாது. மக்கள் உணர்வை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்’’ என்றும் பாஜக ஆட்சி யாளர்களுக்கு மறைமுகமாக அறி வுரை வழங்கியுள்ளார். இதேபோல் கதக் மாவட்டம்  முண்டர்கி நகரில்ஸ்ரீ அன்னதானீஸ் வர மடத்திலும் ரம்ஜான், பசவண்  ணர் ஜெயந்தி ஒன்றாக கொண்டாடப்  பட்டுள்ளது. இது சங்-பரிவாரங்க ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.