தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளில் ஒன்றான சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை யின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் மாநிலம் முழுவதும், சுமார் 60 ஆயி ரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடும்பம் வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு , சாதி வாரியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் கணக்கெடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். அதேபோல குடும்ப உறுப்பினர்களின் ஆதார், கைபேசி எண்கள், வயது, தொழில், வருமா னம், மாற்றுத்திறனாளி, கர்ப்பிணித் தாய்மார்கள், 0 முதல் 5 வயது வரை குழந்தைகளைக் கண்டறிந்து இந்த விபரங்களை ஒன்றிய அரசின் கைபேசி செயலியில் பதிவு செய்கின்றனர். மேலும் மேற்கண்ட அனைவருக்குமான ஊட்டச்சத்து, கல்வி, மதிய உணவு, முறைசாரா முன்பரு வக்கல்வி போன்ற அனைத்தையும் கண்காணிக்கின்ற னர். காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை 8 மணி நேரம் பணி செய்தாலும் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. 8 மணி நேர வேலை சட்டப்படி வாங்கப்படுகிறது; ஆனால் அதற்கான ஊதியம் தான் வழங்கப்படுவதில்லை.
சுகாதாரத்துறை
போலியோ சொட்டுமருந்து வழங்குதல், விட்டமின் ஏ திரவம் வழங்குதல், குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், 30 வயது வரை உள்ள பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், உப்பு சக்கரை கரைசல் வழங்குதல், 11 வயது முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம்பெண்களுக்கு அக்கறையுடன் கூடிய அனைத்து பணிகளையும் இடைவிடாது செய்கின்றனர். இந்த பணி களை முறைப்படுத்த மாதம் ஒரு முறை சிறப்புக்கூட்டங் களில் பங்கேற்க ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். இதற்கு பயணப்படி வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 40 ரூபாயும் நிறுத்தப் பட்டுள்ளது. இத்துடன் வாக்காளர் சேர்ப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் இவர் களின் பணி அளப்பரியது. முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படாத இவர்களுக்கு தடுப்பூசி முகாமில் பங்கேற்றால் மறுநாள் விடுப்பு வழங்கப்படுவதில்லை. அரசின் அனைத்து திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் இவர்கள் வேலை செய்கிறார்கள். அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லையென்றாலும் தங்கள் கடமைகளை செய்கின் றார்கள். பல மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அரசு வாடகை குறைவாக இருப்பதால் கட்டி டங்கள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு மையத்திலும் 35 பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது. 2 முதல் 3 மையங் களை ஒரு பணியாளர் மட்டுமே பராமரிக்கிறார். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் கூடுதல் பணிச்சுமையுடன் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்த ஓய்வில்லாமல் உழைக்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்கள்
இவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச பாது காப்பை தருவதற்கு கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம், சத்துணவு கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய பெயர்களில் செயல்படும் இந்த சங்கங்களிலும் குளறுபடி களுக்கு பஞ்சமில்லை. அங்கன்வாடி ஊழியர்களுக் கான தனியாக துணைப்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் கடன் சங்கத்தில் ரூ. 4.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்காக விண்ணப் பிக்கும் போது ஊதியச்சான்றில் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்து இட வேண்டும். ஆனால் திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், மன்னார்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் கையொப்பம் இட மறுக்கின்றனர். இதன் பல விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது. அதே போன்று சத்துணவு கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடன் வழங்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்களுக்காக மட்டும் துவங்கப்பட்ட சங்கத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன்கள் வழங்குவதற்கு துணை விதிகள் இல்லை. ஆனாலும் சொந்த நிதியில் கடன் வழங்குவது தொடர்கிறது. இதுபோன்ற முரண்பட்ட நடவடிக்கை களால் கூட்டுறவு சங்கங்கள் முடங்கியுள்ளது. தாய் உள்ளத்தோடு சேவையாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முன்னுரிமை அடிப்படையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
கட்டுரையாளர்: திருவாரூர் மாவட்ட தலைவர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் (சிஐடியு)