சென்னை, ஜன.27- சமூக நீதி மற்றும் பெண்ணுரி மையை நாடு முழுமைக்கும் கொண்டு சேர்்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினாா். சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், காணொலி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- சமூக நீதி விஷயத்தில் திராவிட இயக்கம் போட்ட விதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முளைக்கத் தொடங்கியுள்ளது.
அதன் அறுவடையைத்தான் இப்போது பாா்க்கிறோம். தொடா்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக் கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக சமூகநீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட் ்டுள்ளது. இந்தச் சாதனை சாதாரண மாக கிடைத்து விடவில்லை மக்கள் மன்றம், மக்களவை, சட்டப் பேரவை, நீதிமன்றம் ஆகிய இடங்களில்நடத்திய போராட்டங்களின் மூலமாகவே பெற்றிருக்கிறோம். சமூகநீதி என்பது திராவிட இயக்கம் நாட்டுக்குக் கொடுத்த மிக முக்கிய கொடையாகும்.
அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளா்ச்சியே சமூகநீதி. 27 விழுக்காடு இடஒதுக்கீட்டு உரிமையை பாஜக அரசுதான் தூக்கிக் கொடுத்ததாக சிலா் பிரச்சாரம் செய்கிறாா்கள். அவா்களுக்கு நடந்த உண்மை எதுவும் தெரியாது. இந்த விவகாரத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில் பெற்ற வெற்றி, ஏதோ ஒரு வழக்கின் வெற்றியல்ல. பிற்படுத் ்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தின் வெற்றியாகும். இதோடு நமது பணி முடியவில்லை. சமூகநீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.
ரத்தம், பாலின பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சிய மாகும். சமூகநீதியும், பெண்ணுரி மையும்தான் தலையாய லட்சியமாகும். இந்த மகத்தான கொள்கையைத் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சோ்க்கும் பணியைத் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இந்த இணையக் கருத்தரங்கில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, ஏஐபிஎப் அமைப்பின் தலைவா் ஈஸ்வரய்யா, மகாராஷ்டிர மாநில அமைச்சா் ஷகன் புஜ்பால், ஆந்திர மாநில அமைச்சா் ஆதிமுலப்பு சுரேஷ், பிகாா் சட்டப் பேரவை எதிா்க் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பேசினா்.