tamilnadu

உலகச் செய்திகள்

டிபாரிட்டி, மார்ச் 24- மிகவும் அவசியமான நேரத் தில் எங்களுக்கு தடுப்பூசிகளைத் தந்து உதவியதற்காக கியூப மக்க ளுக்கு நன்றி சொல்கிறோம் என்று சஹராவி அரபு ஜனநாயகக் குடியரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் சஹராவி அமைந்துள் ளது. இதை மேற்கு சஹரா என்றும் அழைக்கிறார்கள். இது நீண்டநாளாக ஸ்பெயினின் குடி யேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. 1976 ஆம் ஆண்டில் குடி யரசு என்று அறிவித்துக் கொண் டது. ஆனால், இந்தப் பகுதியில் இருந்து ஸ்பெயின் வெளியேறு கையில்,  மொரோக்கோவும், மவு ரிட்டானியாவும் சண்டை போட்டுக் கொள்ளட்டும் என்று தீர்வு எதை யும் காணாமல் போய்விட்டது.

1991 வரையில் பெரும் சண்டை நடந் தது. குடியரசு என்று அறிவித்துக் கொண்டாலும், சஹராவின் ஒரு பகுதி மொரோக்கோவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தா லும், கொரோனா பாதிப்பு சஹரா வியில் அதிகமாக இருந்தது. வளர்ந்த நாடுகளில் இருந்து உதவி வராத நிலையில், கியூபா வின் உதவியை நாடினார்கள். உட னடியாக தடுப்பூசிகள் அனுப் பப்படுகின்றன. ஒரே தவணையில் 4 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் சஹராவிக்குப் போவதாக கியூபாவின் அமைச்சர்களில் ஒருவரான தேபோரா ரிவாஸ் சாவேத்ரா கூறியுள்ளார். கியூபாவின் தயாரிப்பான சோபெர்னா-02 என்ற தடுப்பூசி தான் தற்போது அனுப்பப்படு கிறது. கப்பலில் தடுப்பூசிகளை அனுப்பிவிட்டு செய்தியாளர்களி டம் பேசிய சாவேத்ரா, “ஒட்டு மொத்த கியூப மக்களின் அன்போடு இந்த தடுப்பூசிகள் கப்பலில் செல்கின்றன.

குறிப்பாக, எங்கள் மருத்துவத்துறை ஊழி யர்களும், விஞ்ஞானிகளும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சஹராவிக்கு உதவி செய்வதில் கியூபா எந்தவிதத் தயக்கமும் காட்டவில்லை” என்று குறிப் பிட்டார். தங்கள் தடுப்பூசி சஹராவி செல்வது குறித்துப் பேசிய கியூப விஞ்ஞானி யூரி வால்டெஸ் பால்பின், “எங்கள் நாட்டின் ஒட்டு மொத்த விஞ்ஞானி சமுதாயம், சஹராவி மக்களுக்காக மட்டு மின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உதவத் தயாராக இருக்கிறது” என்றார். பிப்ரவரி 21, 2022 ஆம் தேதி வரையில் கியூபாவின் மக்கள் தொகையில் 89.1 விழுக் காட்டினருக்கு தடுப்பூசி முழு மையாக செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமான அளவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்ட முதல் நாடு கியூபா என்ற சாதனையையும் படைத்தி ருக்கிறது.